Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 18 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 21 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதால் உங்க உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?
காலை உணவு உண்பது எவ்வளவு அவசியமானது என்று அனைவரும் அறிந்தது. காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் காலை எழுத்தவுடன் வெறும் வயிற்றில் என்ன உணவுகள் சாப்பிடவேண்டும்? என்ன உணவுகள் சாப்பிடக் கூடாது என்று பட்டியலும் உள்ளது. ஆரஞ்சு பழச்சாறுகள், குரோசண்ட்கள் மற்றும் ரொட்டிகள் காலை உணவுப் பட்டியலில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால் அவை காலையில் முதல் விஷயங்களாக சாப்பிட உண்மையில் ஆரோக்கியமானவையா?
சிட்ரஸ் பழங்களில் பழ அமிலங்கள் உள்ளன, அவை நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். இதேபோல், ஈஸ்ட் கொண்ட ரொட்டிகள் வயிற்றின் புறணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது இரைப்பை பிரச்சினைகளை மேலும் ஏற்படுத்தும். ஆதலால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிகபட்ச நன்மைகளை வழங்கும் சில உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். அந்த உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

சூடான நீர் மற்றும் தேன்
சூடான நீர் மற்றும் தேன் பானத்தை அதிகாலையில் குடிக்க வேண்டும் என்று பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. தேன் தாதுக்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் குடலை சுத்தமாக வைத்திருக்கும்போது, அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துவது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
MOST READ: எச்சரிக்கை! திடீரென உங்க எடை குறைந்தால் உங்களுக்கு இந்த மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளதாம்...!

பப்பாளி
குடல் இயக்கத்தை சீராக்க, பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஒரு சூப்பர் உணவு ஆகும். ஆண்டு முழுவதும் எளிதாக கிடைப்பதால், பப்பாளியை உங்கள் காலை உணவில் எளிதாக சேர்க்கலாம். பழம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கும்.

கஞ்சி
கஞ்சி ஒரு அற்புதமான காலை உணவாகும். நீங்கள் கலோரிகளைக் குறைவாகவும், ஊட்டச்சத்து அதிகமாகவும் விரும்பினால் தினமும் காலையில் கஞ்சி அருந்துங்கள். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கஞ்சி சாப்பிடுவது உங்களை மனநிறைவுடன் வைத்திருக்கும். மேலும் உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

தர்பூசணி
பழங்கள் எப்போதும் காலை உணவில் சாப்பிட ஒரு நல்ல வழியாகும். இந்த பட்டியலில் தர்பூசணி முதலிடம் வகிக்கிறது. 90% நீரைக் கொண்ட இந்த பழம் உடலுக்கு அதிகளவு நீரேற்றத்தை வழங்குகிறது. இது சர்க்கரை பசியைத் தடுப்பது மட்டுமல்லாமல் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. தர்பூசணி எலக்ட்ரோலைட்டுகளால் நிறைந்துள்ளது மற்றும் அதிகளவு லைகோபீனையும் கொண்டுள்ளது. இது இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
MOST READ: இந்த பழங்கள் உங்களை அனைத்துவிதமான சிறுநீரக நோய்களில் இருந்தும் பாதுகாக்குமாம் தெரியுமா?

நட்ஸ்
காலை உணவில் ஒரு சில நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமான குடலுக்கு அவசியம். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வயிற்றின் பி.எச் அளவையும் இயல்பாக்குகிறது. உங்கள் அன்றாட உணவில் திராட்சையும், பாதாம் மற்றும் பிஸ்தாவும் சேர்க்கலாம். நீங்கள் அவற்றை மிதமாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது அதிகமாக பருக்கள் மற்றும் எடை அதிகரிப்பை உண்டாக்கும்.

பாதாம் பருப்பு
மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரதம், ஃபைபர், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள பாதாம் எப்போதும் ஒரே இரவில் ஊறவைத்த பின் அவற்றை உட்கொள்ள வேண்டும். பாதாம் தோலில் டானின் உள்ளது. இது உங்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால், அவை எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு உரிக்கப்பட வேண்டும். பாதாம் உங்களுக்கு சரியான அளவு ஊட்டச்சத்தை அளிக்கும், மேலும் உங்கள் மூளையை கூர்மைப்படுத்தவும் உதவும்.