Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதால் உங்க உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?
வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிகபட்ச நன்மைகளை வழங்கும் சில உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
காலை உணவு உண்பது எவ்வளவு அவசியமானது என்று அனைவரும் அறிந்தது. காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் காலை எழுத்தவுடன் வெறும் வயிற்றில் என்ன உணவுகள் சாப்பிடவேண்டும்? என்ன உணவுகள் சாப்பிடக் கூடாது என்று பட்டியலும் உள்ளது. ஆரஞ்சு பழச்சாறுகள், குரோசண்ட்கள் மற்றும் ரொட்டிகள் காலை உணவுப் பட்டியலில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால் அவை காலையில் முதல் விஷயங்களாக சாப்பிட உண்மையில் ஆரோக்கியமானவையா?

சிட்ரஸ் பழங்களில் பழ அமிலங்கள் உள்ளன, அவை நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். இதேபோல், ஈஸ்ட் கொண்ட ரொட்டிகள் வயிற்றின் புறணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது இரைப்பை பிரச்சினைகளை மேலும் ஏற்படுத்தும். ஆதலால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிகபட்ச நன்மைகளை வழங்கும் சில உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். அந்த உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

சூடான நீர் மற்றும் தேன்
சூடான நீர் மற்றும் தேன் பானத்தை அதிகாலையில் குடிக்க வேண்டும் என்று பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. தேன் தாதுக்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் குடலை சுத்தமாக வைத்திருக்கும்போது, அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துவது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

பப்பாளி
குடல் இயக்கத்தை சீராக்க, பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஒரு சூப்பர் உணவு ஆகும். ஆண்டு முழுவதும் எளிதாக கிடைப்பதால், பப்பாளியை உங்கள் காலை உணவில் எளிதாக சேர்க்கலாம். பழம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கும்.

கஞ்சி
கஞ்சி ஒரு அற்புதமான காலை உணவாகும். நீங்கள் கலோரிகளைக் குறைவாகவும், ஊட்டச்சத்து அதிகமாகவும் விரும்பினால் தினமும் காலையில் கஞ்சி அருந்துங்கள். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கஞ்சி சாப்பிடுவது உங்களை மனநிறைவுடன் வைத்திருக்கும். மேலும் உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

தர்பூசணி
பழங்கள் எப்போதும் காலை உணவில் சாப்பிட ஒரு நல்ல வழியாகும். இந்த பட்டியலில் தர்பூசணி முதலிடம் வகிக்கிறது. 90% நீரைக் கொண்ட இந்த பழம் உடலுக்கு அதிகளவு நீரேற்றத்தை வழங்குகிறது. இது சர்க்கரை பசியைத் தடுப்பது மட்டுமல்லாமல் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. தர்பூசணி எலக்ட்ரோலைட்டுகளால் நிறைந்துள்ளது மற்றும் அதிகளவு லைகோபீனையும் கொண்டுள்ளது. இது இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

நட்ஸ்
காலை உணவில் ஒரு சில நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமான குடலுக்கு அவசியம். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வயிற்றின் பி.எச் அளவையும் இயல்பாக்குகிறது. உங்கள் அன்றாட உணவில் திராட்சையும், பாதாம் மற்றும் பிஸ்தாவும் சேர்க்கலாம். நீங்கள் அவற்றை மிதமாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது அதிகமாக பருக்கள் மற்றும் எடை அதிகரிப்பை உண்டாக்கும்.

பாதாம் பருப்பு
மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரதம், ஃபைபர், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள பாதாம் எப்போதும் ஒரே இரவில் ஊறவைத்த பின் அவற்றை உட்கொள்ள வேண்டும். பாதாம் தோலில் டானின் உள்ளது. இது உங்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால், அவை எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு உரிக்கப்பட வேண்டும். பாதாம் உங்களுக்கு சரியான அளவு ஊட்டச்சத்தை அளிக்கும், மேலும் உங்கள் மூளையை கூர்மைப்படுத்தவும் உதவும்.



Click it and Unblock the Notifications