Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
நைட் தூங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல உடம்பு சீக்கிரம் பாழாயிடும்...
இரவு நேரத்தில் நாம் செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நமது ஆரோக்கியத்தை பாழாக்கிவிடும்.
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய நவீன உலகில் வாழ்க்கை முறையில் மட்டுன்றி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள உணவுகளுள் பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாகவே உள்ளன. அதோடு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவுகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

குறிப்பாக சிலர் இரவு நேரங்களில் தவறான உணவுகளை சாப்பிடுகிறார்கள். இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும். எனவே இரவு நேரத்தில் நாம் செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நமது ஆரோக்கியத்தை பாழாக்கிவிடும். இப்போது உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால் எந்த மாதிரியான உணவுகளை இரவு தூங்கும் முன் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

எண்ணெயில் பொரித்த மற்றும் உப்புள்ள உணவுகள்
இரவு தூங்கும் முன்பு வயிறு நிறைய எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிறு நிறைய சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். அதுவும் இரவு நேரத்தில் எண்ணெயில் பொரித்த மற்றும் உப்புள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், இம்மாதிரியான உணவுகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

அதிக பானங்களை குடிக்கக்கூடாது
சிலருக்கு இரவு தூங்கும் முன், ப்ளாக் காபி, பால் போன்வற்றைக் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் பானங்களை அதிகம் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால், இரவு தூங்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும். எனவே இரவு நேரத்தில் திரவங்களை அதிகம் உட்கொள்ளாதீர்.

கார உணவுகளை தவிர்க்கவும்
இரவு நேரத்தில் உப்புள்ள மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் மட்டுமின்றி, காரமான உணவுகளையும் உண்ணக்கூடாது. ஒருவேளை நல்ல காரமான உணவுகளை தூங்கும் முன்பு சாப்பிட்டால், அது தூக்க பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, செரிமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

குளிர்ச்சியான உணவுகளில் இருந்து விலகி இருக்கவும்
குளிர்ச்சியான உணவுகளையும் இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டால் எளிதில் சளி பிடித்துக் கொள்ளும். வேண்டுமானால், தூங்குவதற்கு 3-4 மணிநேரத்திற்கு முன் வாழைப்பழம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை உண்ணலாம்.

மதுவைத் தவிர்க்கவும்
பலரும் ஆல்கஹால் அருந்தினால் நன்கு தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இரவு தூங்கும் முன் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்மையில் ஆல்கஹால் ஒருவரின் தூக்கத்தை தான் பாதிக்கும். குறிப்பாக மது அருந்துவதால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் மற்றும் மிகவும் சப்தத்துடன் குறட்டை விடக்கூடும்.



Click it and Unblock the Notifications