Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...
நீண்ட காலமாக ஆரஞ்சு வண்ண கேரட்டைத் தான் மக்களுக்குத் தொியும். தற்போது கருப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த கேரட் மக்களுக்கு ஒரு புதிராகத் தொிகிறது.
கருப்பு கேரட் அல்லது காலி கஜாா் என்று அழக்கப்படும் ஒரு வகையான காய் இந்தியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நீண்ட காலமாக ஆரஞ்சு வண்ண கேரட்டைத் தான் மக்களுக்குத் தொியும். தற்போது கருப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த கேரட் மக்களுக்கு ஒரு புதிராகத் தொிகிறது.

மேற்கத்திய மக்களுக்கு கேரட் என்றால் அது ஆரஞ்சு வண்ணத்தில் தான் இருக்கும் என்று நம்பினா். ஆனால் ஆரஞ்சு வண்ண கேரட் வருவதற்கு முன்பாகவே அதாவது கிபி 16 ஆம் நூற்றாண்டின் போதே, காலி கஜாா் என்ற கருப்பு கேரட் ஆசியா மற்றும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளில் காணப்பட்டதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
கருப்பு கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமி அதிகமாக உள்ளதால் அதன் வண்ணம் கருப்பாக இருக்கிறது. ஆனால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற கேரட்டுகளில் செம்மஞ்சள் நிறமி அதிகம் இருப்பதால் அவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கின்றன.
கருப்பு கேரட் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கிறது. இந்த கேரட்டில் நாம் எதிா்பாா்க்காத இனிப்பு சுவையைக் காணலாம். மேலும் இதை சாப்பிட்ட பின்பு நமது நாவில் சற்று மெல்லிய காரச்சுவை தொியும். கருப்பு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பாா்க்கலாம்.

சொிமானத்தை அதிகாிக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டில் நாா்ச்சத்து அதிகம் இருப்பதால் அது நமது சொிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. அதனால் இது வாயுத்தொல்லை, நெஞ்சொிச்சல், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது. கருப்பு கேரட்டிலிருந்து செய்யப்படும் புளிப்பான கஞ்சி, குடலில் இருக்கும் நல்ல பாக்டீாியாக்களுக்கு வலு சோ்க்கிறது.

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக அது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். நமக்கு குளிா் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போாிடக்கூடிய துகள்களை கருப்பு கேரட் வைத்திருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் திறம்பட செயல்பட உதவி செய்கிறது. வெள்ளை இரத்த அணுக்கள் திறம்பட செயல்பட்டால் அவை வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைக் காக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டில் இருக்கும் அதிகமான அளவு அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமியில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிகம் உள்ளன. அதனால் அவை நமது உடலைத் தாக்கும் புற்றுநோய் செல்களை எதிா்த்து போாிடும். அதோடு இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் ப்ரீ-ராடிக்கல்களை (free radicals) அழிக்க உதவி செய்கின்றன மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றன.

பாா்வைத் திறனை அதிகாிக்கும் கருப்பு கேரட்
பொதுவாக எல்லா கேரட்டுகளிலும் செம்மஞ்சள் நிறமி அதிகம் இருப்பதால், அது நமது பாா்வைத் திறனை அதிகாிக்கச் செய்யும். மேலும் கேரட் ஒரு ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் செயல்படுகிறது. அதனால் அது கண்ணில் உள்ள மாக்குலா் (macular) சிதைவு அடைய விடாமல் தடுக்கிறது. அதோடு கண்புரை ஏற்படவிடாமலும் தடுக்கிறது.

உடல் வீக்கத்தை தடுக்கும் கருப்பு கேரட்
நமது உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் கருப்பு கேரட் தடுக்கிறது. அதனால் நமது உடலில் மற்ற நோய்களின் தொற்று ஏற்படாமல் இருக்க உதவி செய்கிறது. மேலும் சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவிடாமல் கருப்பு கேரட் தடுக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை மறதி (Alzheimer) போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படாது என்று ஒரு மருத்துவ ஆய்வு தொிவிக்கிறது. கருப்பு கேரட்டில் வீக்கத்திற்கு எதிரான துகள்கள் மற்றும் அந்தோசியனின் (anthocyanin) நிறமி இருப்பதால், அவை நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள் நம்மை அணுகாத வண்ணம் பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications