Just In
- 16 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 5 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 6 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்கள் மூளையை முழுவதுமாக மழுங்கடிக்கின்ற இந்த செயல்களை நிச்சயம் செய்யதீர்கள்...!
நமது உடலில் உள்ள உறுப்புகளில் சில முக்கியமான உறுப்புகள் உள்ளன. அவற்றின் செயல்திறன் அதி அற்புதமானது. இதயம், மூளை, கண் போன்றவை முதன்மையான உறுப்பாக கருதப்படுகிறது. இதில் மூளை தான் நமது முழு செயல்திறனையும் நிர்ணயிக்கும் இயற்கை கணினி.
மனிதனின் மூளையை தோற்கடிப்பதற்கு இன்னும் செயற்கை மூளைகள் வரவில்லை. இத்தகைய மூளையின் மகத்துவம் அதன் நினைவாற்றலையும் ஞாபக திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நாம் செய்கின்ற பல செயல்களால் மூளையின் செயல்திறன் குறைந்தும், மங்கியும் போய்விடுகிறது. இதற்கான காரணங்களை நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
மாயாஜாலங்கள் கொண்ட மூளை..!
மூளையின் செயல்திறனை வைத்து தான் பல ஆராய்ச்சிகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. எந்திரன் படத்தில் நாம் பார்த்தது போன்றே வருங்காலத்தில் ரோபோட்ஸ்கள் நம்மை ஆள்வதற்கு சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. இதனை செயற்கை நுண்ணறிவியலை பயன்படுத்தி செய்ய கூடும்.
வயசை மட்டும் கேட்காதீர்கள்...!
அடிக்கடி உங்களின் வயசை பற்றி நீங்கள் யோசித்து கொண்டோ அல்லது கண்ணாடியில் உங்களின் முகத்தை பார்த்து கொண்டோ இருந்தால் நீங்கள் வயதானவராக உங்களின் மனதுக்குள் ஒரு ஆழ்ந்த எண்ணம் முளைக்க தொடங்கி விடும். இதுவே, மூளையின் திறனை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
வெண்ணெய் விரும்பிகளா..?
பலருக்கு சாதாரண எண்ணெய்யை காட்டிலும் வெண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், இதில் அதிக அளவில் நிறையுற்ற கொழுப்புகள் உள்ளதால் மூளையின் செயல்திறனை குறைக்க கூடும்.
மாத்திரைக்கு நோ நோ..!
இப்போதெல்லம் எதை அதிகம் சாப்பிடுகின்றோமோ இல்லையோ, மாத்திரைகளை நாம் கணக்கில் அடங்காதவாறு சாப்பிட்டு கொண்டே இருக்கின்றோம். குறிப்பாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதால் அவை மூளையின் ஞாபக திறனை குறைத்து விடும்.
MOST READ: உடல் எடையை குறைப்பதற்கு உலக நாடுகளில் கடைபிடிக்கின்ற வினோத முறைகளை தெரிஞ்சிக்கோங்க...!
நிறையுற்ற கொழுப்புகளா..?
அதிக கொழுப்புகள் கொண்ட உணவுகளை உண்டால் கட்டாயம் மூளையின் ஆரோக்கியம் பாதிக்க கூடும். எனவே, கொழுக்கள் அற்ற உணவுகளை உண்ணுங்கள். அல்லது நல்ல கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.
படிப்ஸ்களுக்கு ஜாலிதான்..!
அதிகமாக படிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த மூளையின் செயல்திறன் கூடுதலாக இருக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மூளைக்கு வேலையை நாம் எந்த அளவுக்கு தருகின்றோமோ அந்த அளவிற்கு தான் மூளை பயங்கரமாக வேலை செய்யும். இல்லையேல் மங்கி போக கூடும்.
அதிக இனிப்பு...அதிக ஆப்பு..!
இனிப்புகள் அதிகம் கொண்ட உணவுகளை நீங்கள் அதிகம் விரும்பி உண்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு ஆபத்து அதிகம். அதிக இனிப்பு உணவுகள் ஞாபக திறனை குறைக்க கூடியதாகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் உயர்த்த கூடும்.
குறைந்த தூக்கமா..? அதிக தூக்கமா..?
மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம் கண்ட வேலைகளையும் கண்ட நேரத்தில் பார்க்க கூடாது. அவ்வாறு செய்தால் மூளை பாதிக்கப்படும். 6முதல் 7 மணி நேர தூக்கம் ஒரு நாளைக்கு மிக அவசியமானது. அதிக நேரம் தூங்கினாலும், குறைந்த நேரம் தூங்கினாலும் அது மூளைக்கு உகந்ததல்ல.
MOST READ: குடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்...!
அர்த்தமற்ற வாழ்க்கையா..?
காலையில் ஏன் எழுந்து கொள்கிறோம், எதற்காக இந்த வாழ்வு என்ற கேள்விக்கான பதில் நம்மில் பலருக்கு தெரியாது. இந்த நிலை பல வருடமாக நீடுத்தால், நமக்கு வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். இந்த நிலை உங்களின் மூளையை அதிகம் பாதித்து நினைவாற்றலை குறைக்க ஆரம்பிக்கும்.
தனிமை...தனிமை..!
அதிக நேரம் தனிமை பல சமயங்களில் நமக்கு ஆபத்தை தர கூடும். நீங்கள் தனிமையாக இருந்தால் தேவையற்ற நினைவலைகள் வரா கூடும். ஆதலால், மூளை அதன் செயல்திறனை குறைத்து கொள்ள நேரிடலாம்.
புகை மூளைக்கு பகையா..?
புகை பழக்கம் என்கிற ஒரு தொற்று கிருமி இன்று பலரிடம் காணப்படுகிறது. இது ஏற்படுத்துகிற ஆபத்துகளில் மூளை பாதிப்பும் அடங்கும். ஞாபக மறதி, சோம்பலான நிலை, கவன குறைவு ஆகியவற்றை இது தரும்.
உச்சநிலை மன அழுத்தம்..!
பலருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. தேவையற்ற பிரச்சினைகளுக்கெல்லாம் தங்களது மண்டையை போட்டு குழப்பி கொள்வார்கள். இந்த நிலை பலருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும். அதிக மன அழுத்தம் மூளையை பெரிதும் பாதித்து, ஞாபக திறனை அழிக்க செய்யும்.
காய்கனிகள் வேண்டாமா..?
நம்மில் பலர் காய்கனிகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார். பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் பல நன்மைகளே கிடைக்கும். இவற்றை தவிர்த்தால் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்க கூடும். அத்துடன், இதய நோய்கள், ஊட்டசத்து கோளாறுகள், எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை ஏற்படும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.