Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஒரே வாரத்தில் நாள்பட்ட இருமலை குணப்படுத்த வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...
நாள்பட்ட இருமலை ஒரே வாரத்தில் குணப்படுத்தும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் இருமல் வந்து கொண்டே இருந்தால், எந்த ஒரு செயலிலும் சரியாக ஈடுபட முடியாமல் போய், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். சில நேரங்களில் மருந்து மாத்திரைகளாலும் இருமலைப் போக்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட தொல்லை மிகுந்த நாள்பட்ட இருமலை ஓர் அற்புதமான இயற்கை வழியின் மூலம் வெளியேற்றலாம்.

அதுவும் முட்டைக்கோஸ் மற்றும் தேன் கொண்டு எளிய வழியில், எவ்வித சிரமமும் இல்லாமல் நாள்பட்ட இருமலுக்குக் காரணமான சளித் தேக்கத்தை வெளியேற்றலாம். இந்த முறைக்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்முறையைப் பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1
தேன் - சிறிது

செய்முறை #1
முதலில் முட்டைக்கோஸின் இலைகளை தனியாகப் பிரித்து, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும். இப்போது முட்டைக்கோஸின் இலைகள் சற்று வெதுவெதுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

செய்முறை #2
பின்பு முட்டைக்கோஸ் இலையின் ஒரு புறத்தில் மட்டும் தேனைத் தடவி, மார்புப் பகுதியில் வைக்க வேண்டும். பின் ஒரு நைலான் துணியால் மார்பு பகுதியைச் சுற்றிக் கொள்ள வேண்டும். இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும்.

கடுமையான இருமல்
ஒருவேளை இருமல் மிகவும் கடுமையாக இருந்தால், அப்போது வேண்டுமானால் மார்பு பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸையும், முதுகுப் பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸ் இலையையும் விரித்து, கட்டிக் கொள்ளுங்கள்.

நீரால் கழுவவும்
மறுநாள் காலையில் முட்டைக்கோஸ் விரிப்பை எடுக்கும் போது, ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியை நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு
மூச்சுக்குழாய் அழற்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், முதல் முறை முயற்சிக்கும் போதே நல்ல மாற்றம் தெரியும். அதுவே மூச்சுக்குழாய் அழற்சி சற்று முற்றிய நிலையில் இருந்தால், இந்த சிகிச்சையை தொடர்ந்து 5-7 நாட்கள் இரவில் பின்பற்ற வேண்டும். இதனால் நாள்பட்ட இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.



Click it and Unblock the Notifications