Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஒரே வாரத்தில் நாள்பட்ட இருமலை குணப்படுத்த வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...
நாள்பட்ட இருமலை ஒரே வாரத்தில் குணப்படுத்தும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் இருமல் வந்து கொண்டே இருந்தால், எந்த ஒரு செயலிலும் சரியாக ஈடுபட முடியாமல் போய், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். சில நேரங்களில் மருந்து மாத்திரைகளாலும் இருமலைப் போக்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட தொல்லை மிகுந்த நாள்பட்ட இருமலை ஓர் அற்புதமான இயற்கை வழியின் மூலம் வெளியேற்றலாம்.

அதுவும் முட்டைக்கோஸ் மற்றும் தேன் கொண்டு எளிய வழியில், எவ்வித சிரமமும் இல்லாமல் நாள்பட்ட இருமலுக்குக் காரணமான சளித் தேக்கத்தை வெளியேற்றலாம். இந்த முறைக்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்முறையைப் பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1
தேன் - சிறிது

செய்முறை #1
முதலில் முட்டைக்கோஸின் இலைகளை தனியாகப் பிரித்து, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும். இப்போது முட்டைக்கோஸின் இலைகள் சற்று வெதுவெதுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

செய்முறை #2
பின்பு முட்டைக்கோஸ் இலையின் ஒரு புறத்தில் மட்டும் தேனைத் தடவி, மார்புப் பகுதியில் வைக்க வேண்டும். பின் ஒரு நைலான் துணியால் மார்பு பகுதியைச் சுற்றிக் கொள்ள வேண்டும். இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும்.

கடுமையான இருமல்
ஒருவேளை இருமல் மிகவும் கடுமையாக இருந்தால், அப்போது வேண்டுமானால் மார்பு பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸையும், முதுகுப் பகுதியில் ஒரு லேயர் முட்டைக்கோஸ் இலையையும் விரித்து, கட்டிக் கொள்ளுங்கள்.

நீரால் கழுவவும்
மறுநாள் காலையில் முட்டைக்கோஸ் விரிப்பை எடுக்கும் போது, ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியை நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு
மூச்சுக்குழாய் அழற்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், முதல் முறை முயற்சிக்கும் போதே நல்ல மாற்றம் தெரியும். அதுவே மூச்சுக்குழாய் அழற்சி சற்று முற்றிய நிலையில் இருந்தால், இந்த சிகிச்சையை தொடர்ந்து 5-7 நாட்கள் இரவில் பின்பற்ற வேண்டும். இதனால் நாள்பட்ட இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.



Click it and Unblock the Notifications











