Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
விடியற்காலையில் இப்படி நீரை அருந்துவதால் உண்டாகும் பலன்கள் என்ன?
நோயில்லாத வாழ்க்கைக்கு இயற்கை முறையில் வாழ்வதே சிறந்தது. இயற்கை முறையில் நீங்கள் நோய்களை வராமல் தடுக்கவும் , குணப்படுத்தவும் இங்கே மருத்துவ முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள மூலிகைகள் நோய்களை தீர்க்கும் மற்றும் நோய்களை தடுக்கும் அபூர்வ ஆற்றல் பெற்றவை.

நீண்ட ஆயுளுடன் திடமாகவும், வளமாகவும் வாழ இந்த குறிப்புகளை கொஞ்சம் செய்து பாருங்களேன்.

விடியற்காலையில் :
துளசி, வில்வம் அல்லது அருகம்புல் ஆகிய்வற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடி விடுங்கள்.
மறுநாள் அந்த நீரை விடியற்காலையில் அருந்த வேண்டும். அவ்வாறு உண்டால் உண்டாகும் பலன்கள் அற்புதமானது. தொடர்ந்து படியுங்க

மூலிகை நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகள்:
உடலிலுள்ள அனைத்து குடல்கள் மற்றும் சிறு நீப்பையில் இருக்கும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும். மலச்சிக்கல் குணமாகும். உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

மூலிகை நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் :
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் நெருங்காது. அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைந்து கட்டுப்படும்.

சர்க்கரை நோய் குணமாக :
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நோய் குணமாகும்.

தலை வலி குணமாக :
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

வாயுத் தொல்லைக்கு :
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.



Click it and Unblock the Notifications