Just In
- 47 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 50 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
குறைந்த ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும் விருக்ஷாசனா - தினம் ஒரு யோகா
விருக்ஷா என்றால் மரம் என்று சமஸ்கிருதத்தில் பொருள். மரம் அடியில் குறுகி, மேலே விரிந்து நிற்பது போன்று, ஒரு காலில் மொத்த உருவத்தையும் தாங்கி நிற்கும் இந்த யோகாவிற்கு விருக்ஷாசனா என்று பெயர் வந்துள்ளது.
ரத்த ஓட்டம் குறைவாக சென்று, போதிய ரத்தம் உறுப்புகளுக்கு சரிவர கிடைக்காமல்போகும். இதைத்தான் குறைந்த ரத்த அழுத்தம் என்று சொல்வார்கள்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இரண்டுமே உடலுக்கு ஆபத்துதான்.
தலைசுற்றல், தலைவலி, மங்கலான கண்பார்வை குறைந்த ரத்த அழுத்ததின் அறிகுறிகள் இவையெல்லாம் குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்.
திடீரென உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போது, அல்லது படுத்தவுடன் எழும்போது கண்கள் இருட்டிக் கொண்டு, தலை சுற்றினால் அது குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும்.
குறைந்த ரத்தம் அழுத்தம் உடலுக்கு ஆபத்தைதான் தரும். ஆகவே உடனடியாக கவனிக்க வேண்டும். அவற்றை சரி செய்ய யோகாவில் ஒரு தீர்வு உண்டு.
அதுதான் விருக்ஷாசனா. இது செய்வதற்கு மிக எளிது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தரையில் உள்ள விரிப்பில் நேராக நில்லுங்கள். மூச்சை சீராக விட வேண்டும். கால்களை நன்றாக சம நிலைப் படுத்தி நின்றுகொள்ளுங்கள்.
முதலில் வலது காலை தூக்கி, இடது காலின் தொடை மீது பாதம் பதிய வைக்க வேண்டும். முனிவர் ஒற்றைக் காலில் தவம் செய்வது போல. இப்போது கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள். உங்கள் உடல் நேராக இருக்க வேண்டும்.
உடல் ஆடாமல் இருக்க உங்கள் இடது காலால் நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். கண்கள் நேராக பார்த்தபடி இருக்க வேண்டும். 1 நிமிடம் அவ்வாறு இருந்துவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள்.
இப்போது இது போல், இடது காலுக்கும் செய்யுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
உங்கள் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்துதல் அதிகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.
குறிப்பு
:
ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, அதிக ரத்த அழுத்தம், ஸ்பாண்டைலிடிஸ் ஆகியவை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.