Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியைப் போக்கும் பரிவ்ரத பார்ச்வ கோணாசனா :
இடுப்பு வலி என்பது பெரும்பாலான பெண்களுக்கு வரும். அதிக பளுவினைத் தூக்கினால், எலும்புகள் பலவீனமாக இருந்தால் வரும் அல்லது அதிக உடல் எடை கூடினாலும் இடுப்பு வலி தாங்க முடியாது. ஆனால் சிலருக்கு இடுப்பும் தொடையும் சேரும் இடத்தில் வலி ஏற்படும். இது விளையாட்டு வீரகளுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

வலிக்கான காரணங்கள் :
இதற்கு காரணம், தசை பிடிப்பு, மூட்டு இணைப்புகளில் உள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பு ஆகியவைகளை சொல்லலாம்.
மேலும் ஆண்களின் விதைப்பையில் பிரச்சனைகள் இருந்தாலும், இவ்வாறான வலி தோன்றும். இதற்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்ற பெயரும் உண்டு. பெயர் தான் அப்படியே தவிர, ஹெர்னியாவிற்கும், இந்த வலிக்கும் சம்பந்தம் இல்லை. சிறு நீரகத்தில் கற்கள் இருந்தால், சிறு நீரக தொற்று ஏற்பட்டாலும், இந்த பகுதியில் வலி ஏற்படும்.
பரிவ்ரத பார்ச்வ கோணாசனா :
இடுப்பு வலிக்கு தீர்வுகள் நிறைய இருந்தாலும், இடுப்பும், தொடையும் இணையும் கவட்டிப் பகுதியில் வலியை போக்க யோகாவில் ஒரு ஆசனம் இருக்கிறது. அது பரிவ்ரத பார்ச்வ கோணாசனா என்பதாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
முதலில் தடாசனத்தில் நிற்க வேண்டும். அதாவது நேராக நிறக் வேண்டும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தபடியே இரண்டு கால்களையும் அகற்றி நில்லுங்கள். கைகள் நேராக உடலோடு சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் மூச்சை விட்டபடி, உடலை வலது பக்கம் திருப்புங்கள்.
இப்போது வலது முட்டியை மடக்க வேண்டும். மெதுவாய் இடது கையை குனிந்து வலது பாதத்திற்கு இணையாக வையுங்கள்.
இடது கால் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது கையை மேலே தலைக்கு மேலே உயர்த்துங்கள். தலையை மேலே பார்த்தபடி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆசனத்தில் அரை நிமிடம் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாய் கைகளையும் , கால்களையும் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் நெகிழ்வுத் தன்மையை தரும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும்.
அடிவயிற்றில் உள்ள உறுப்புக்களை செயல்படவைக்கும்
குறிப்பு :
ரத்த கொதிப்பு, தூக்கமின்மை தலைவலி இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














