Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மன அழுத்தத்தை குறைக்கும் ஈஸியான யோகா!!
எல்லாருமே படித்து ஒரு வேலையில் அமர வேண்டுமென்றுதான் சிறு வயதிலிருந்து மாங்கு மாங்கென்று படிக்கிறோம். படித்தாயிற்று, வேலையும் கிடைத்தாயிற்று என்று யாராலும் நிம்மதி அடையமுடிகிறதா? இல்லை.
அதற்கு பின்னும் ஓட்டம்தான். பொருளாதரத்தை மேம்படுத்த வேண்டும். போட்டிகளை சமாளிக்க வேண்டும் ,பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இதன் விளைவு மன அழுத்தம்.

இன்று உலகளவில் மன அழுத்தம் இல்லாத மனிதர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். அதற்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட முடியுமா? இந்த பிரச்சனைகளிலிருந்து எப்படி வெளிவரலாம்.
நல்ல இசையை கேளுங்கள். வாரம் ஒருமுறை பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். மனதை முடிந்த வரை மகிழ்ச்சியான விஷயத்திற்கு திசை திருப்புங்கள். அதைவிட இன்னும் சிறப்பான ஒரு வழி யோகா. யோகாவினால் எத்தனையோ நோய்களை குணமாக்கலாம். மன அமைதி, உடல் ஆரோக்கியம் இரண்டிற்கும் வழியை தரும்.
உர்த்வ ஹஸ்தாசனா :
இந்த ஆசனம் செய்வதற்கு எளிது. மன அழுத்ததை குறைக்கும். உர்த்வ என்றால் சமஸ்கிருதத்தில் மேலே என்று பெயர். ஹஸ்தா என்றால் கைகள். கைகளை மேல் நோக்கி சல்யூட் அடிப்பது போல் செய்யப்படும் இந்த யோகாவினால் நிறைய பயன்கள் பெறலாம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் தடாசனாவில் நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். கால்களுக்கு இடையே இடைவெளி தேவையில்லை.
நேராக கைகளை தூக்கி, மேல் நோக்கி நீட்டுங்கள். உங்கள் கைகளைபார்த்தவாறு முகத்தையும் மேலே உயர்த்த வேண்டும். அந்தே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூசை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள் :
இது ஆஸ்துமாவிற்கு நல்ல பலன் தரும். சுவாசக் குழாய் சீராகும். கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தரும். தோள்பட்டைகள் பலம்பெறும். மன அழுத்தம், மனப்பதட்டம் குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














