Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
நீரிழப்பினால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
நீரின்றி அமையாது உலகு. நமது உடலும் கூடத்தான். நமது உடல் 64% நீரினால் ஆனது. உடலில் அனைத்து இயக்கங்களுக்கும், என்சைம், ரத்தம் ஆகியவற்றிற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது.
நீர்ச்சத்து தேவையான அளவு இருந்தால்தான் ரத்த ஓட்டம் நன்கு அமையும். ஜீரண சக்தி துரிதமாகும். ஹார்மோன் செயல்படும். மூளை , சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
போதிய அளவில் நீர் குடிக்காததும் உடல் பருமனுக்கு காரணமாகும் என்பது தெரியுமா? அதோடு நீரிழப்பினால் உண்டாகும் இன்னபிற பிரச்சனைகளையும் இப்போது பார்ப்போம்.

சோர்வு :
உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மிக முக்கியமானது நீர்தான். நீர் குறைவாகும்போது என்சைம் செயல்கள் குறையும். இதனால் உடல் சோர்வு தன்னிச்சையாக ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு :
ரத்தத்தில் 92% நீர்தான் உள்ளது. நீரிழப்பு உண்டாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் உண்டாகிவிடும். இது ஆபத்தானது.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :
நீர்ச்சத்து குறையும்போது, போதுமான காற்று உள்ளே வருவது தடைபடும். இதனால் ஹிஸ்டமின் என்ற அலர்ஜியை உண்டாக்கும் புரதம் அதிகமாகி, நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும்.

சரும நோய்கள் :
நீரிழப்பினால் நச்சுக்கள் வெளியேகாமல் சருமத்தின் உள்ளடுக்களிலேயே தங்கும். ரத்தமும் அசுத்தமாகிவிடும். இதன் எதிரொலியாக சரும வியாதிகள் உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அதிகமாகும் :
போதுமான நீரில்லாதபோது கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் உடலிலேயே தங்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும். இதனால் உடல் பருமன், இதய நோய்களுக்கான ஆபத்துகள் தாக்கும்.

ஜீரண சக்தி பாதிக்கும் :
ஜீரண சக்தி கடுமையாக குறைந்துவிடும். அல்சர், நெஞ்செரிச்சல் ஆகியவைகள் உண்டாகும்.

சிறு நீரகம் கோளாறுகள்:
சிறு நீரகத்தில் வந்தடையும், கழிவுகள், நச்சுக்கள் வெளியேற முடியாது. இதனால் தொற்று நோய்கள் தாக்கும். அதோடு கரையாத மினரல்கள் சிறு நீரகத்திலேயே தங்கி, கற்களை உருவாக்கிவிடும். இதனால் பலப் பிரச்சனைகளைத் தரும்.

மலச்சிக்கல் :
நீர்ச்சத்து குறையும்போது மலக்குடலில் நெகிழ்வுத்தன்மை குறைந்து கெட்டிப்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி, பைல்ஸ் போன்ற வியாதிகளும் ரத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.



Click it and Unblock the Notifications