Latest Updates
-
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை
நீரிழப்பினால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
நீரின்றி அமையாது உலகு. நமது உடலும் கூடத்தான். நமது உடல் 64% நீரினால் ஆனது. உடலில் அனைத்து இயக்கங்களுக்கும், என்சைம், ரத்தம் ஆகியவற்றிற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது.
நீர்ச்சத்து தேவையான அளவு இருந்தால்தான் ரத்த ஓட்டம் நன்கு அமையும். ஜீரண சக்தி துரிதமாகும். ஹார்மோன் செயல்படும். மூளை , சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
போதிய அளவில் நீர் குடிக்காததும் உடல் பருமனுக்கு காரணமாகும் என்பது தெரியுமா? அதோடு நீரிழப்பினால் உண்டாகும் இன்னபிற பிரச்சனைகளையும் இப்போது பார்ப்போம்.

சோர்வு :
உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மிக முக்கியமானது நீர்தான். நீர் குறைவாகும்போது என்சைம் செயல்கள் குறையும். இதனால் உடல் சோர்வு தன்னிச்சையாக ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு :
ரத்தத்தில் 92% நீர்தான் உள்ளது. நீரிழப்பு உண்டாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் உண்டாகிவிடும். இது ஆபத்தானது.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :
நீர்ச்சத்து குறையும்போது, போதுமான காற்று உள்ளே வருவது தடைபடும். இதனால் ஹிஸ்டமின் என்ற அலர்ஜியை உண்டாக்கும் புரதம் அதிகமாகி, நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும்.

சரும நோய்கள் :
நீரிழப்பினால் நச்சுக்கள் வெளியேகாமல் சருமத்தின் உள்ளடுக்களிலேயே தங்கும். ரத்தமும் அசுத்தமாகிவிடும். இதன் எதிரொலியாக சரும வியாதிகள் உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அதிகமாகும் :
போதுமான நீரில்லாதபோது கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் உடலிலேயே தங்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும். இதனால் உடல் பருமன், இதய நோய்களுக்கான ஆபத்துகள் தாக்கும்.

ஜீரண சக்தி பாதிக்கும் :
ஜீரண சக்தி கடுமையாக குறைந்துவிடும். அல்சர், நெஞ்செரிச்சல் ஆகியவைகள் உண்டாகும்.

சிறு நீரகம் கோளாறுகள்:
சிறு நீரகத்தில் வந்தடையும், கழிவுகள், நச்சுக்கள் வெளியேற முடியாது. இதனால் தொற்று நோய்கள் தாக்கும். அதோடு கரையாத மினரல்கள் சிறு நீரகத்திலேயே தங்கி, கற்களை உருவாக்கிவிடும். இதனால் பலப் பிரச்சனைகளைத் தரும்.

மலச்சிக்கல் :
நீர்ச்சத்து குறையும்போது மலக்குடலில் நெகிழ்வுத்தன்மை குறைந்து கெட்டிப்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி, பைல்ஸ் போன்ற வியாதிகளும் ரத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.



Click it and Unblock the Notifications