Just In
- 26 min ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 56 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 2 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீரிழப்பினால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
நீரின்றி அமையாது உலகு. நமது உடலும் கூடத்தான். நமது உடல் 64% நீரினால் ஆனது. உடலில் அனைத்து இயக்கங்களுக்கும், என்சைம், ரத்தம் ஆகியவற்றிற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது.
நீர்ச்சத்து தேவையான அளவு இருந்தால்தான் ரத்த ஓட்டம் நன்கு அமையும். ஜீரண சக்தி துரிதமாகும். ஹார்மோன் செயல்படும். மூளை , சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
போதிய அளவில் நீர் குடிக்காததும் உடல் பருமனுக்கு காரணமாகும் என்பது தெரியுமா? அதோடு நீரிழப்பினால் உண்டாகும் இன்னபிற பிரச்சனைகளையும் இப்போது பார்ப்போம்.
சோர்வு :
உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மிக முக்கியமானது நீர்தான். நீர் குறைவாகும்போது என்சைம் செயல்கள் குறையும். இதனால் உடல் சோர்வு தன்னிச்சையாக ஏற்படும்.
ரத்தக் கொதிப்பு :
ரத்தத்தில் 92% நீர்தான் உள்ளது. நீரிழப்பு உண்டாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் உண்டாகிவிடும். இது ஆபத்தானது.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :
நீர்ச்சத்து குறையும்போது, போதுமான காற்று உள்ளே வருவது தடைபடும். இதனால் ஹிஸ்டமின் என்ற அலர்ஜியை உண்டாக்கும் புரதம் அதிகமாகி, நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும்.
சரும நோய்கள் :
நீரிழப்பினால் நச்சுக்கள் வெளியேகாமல் சருமத்தின் உள்ளடுக்களிலேயே தங்கும். ரத்தமும் அசுத்தமாகிவிடும். இதன் எதிரொலியாக சரும வியாதிகள் உண்டாகும்.
கொலஸ்ட்ரால் அதிகமாகும் :
போதுமான நீரில்லாதபோது கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் உடலிலேயே தங்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும். இதனால் உடல் பருமன், இதய நோய்களுக்கான ஆபத்துகள் தாக்கும்.
ஜீரண சக்தி பாதிக்கும் :
ஜீரண சக்தி கடுமையாக குறைந்துவிடும். அல்சர், நெஞ்செரிச்சல் ஆகியவைகள் உண்டாகும்.
சிறு நீரகம் கோளாறுகள்:
சிறு நீரகத்தில் வந்தடையும், கழிவுகள், நச்சுக்கள் வெளியேற முடியாது. இதனால் தொற்று நோய்கள் தாக்கும். அதோடு கரையாத மினரல்கள் சிறு நீரகத்திலேயே தங்கி, கற்களை உருவாக்கிவிடும். இதனால் பலப் பிரச்சனைகளைத் தரும்.
மலச்சிக்கல் :
நீர்ச்சத்து குறையும்போது மலக்குடலில் நெகிழ்வுத்தன்மை குறைந்து கெட்டிப்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி, பைல்ஸ் போன்ற வியாதிகளும் ரத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.