Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
நீரிழப்பினால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?
நீரின்றி அமையாது உலகு. நமது உடலும் கூடத்தான். நமது உடல் 64% நீரினால் ஆனது. உடலில் அனைத்து இயக்கங்களுக்கும், என்சைம், ரத்தம் ஆகியவற்றிற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது.
நீர்ச்சத்து தேவையான அளவு இருந்தால்தான் ரத்த ஓட்டம் நன்கு அமையும். ஜீரண சக்தி துரிதமாகும். ஹார்மோன் செயல்படும். மூளை , சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
போதிய அளவில் நீர் குடிக்காததும் உடல் பருமனுக்கு காரணமாகும் என்பது தெரியுமா? அதோடு நீரிழப்பினால் உண்டாகும் இன்னபிற பிரச்சனைகளையும் இப்போது பார்ப்போம்.

சோர்வு :
உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மிக முக்கியமானது நீர்தான். நீர் குறைவாகும்போது என்சைம் செயல்கள் குறையும். இதனால் உடல் சோர்வு தன்னிச்சையாக ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு :
ரத்தத்தில் 92% நீர்தான் உள்ளது. நீரிழப்பு உண்டாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் உண்டாகிவிடும். இது ஆபத்தானது.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :
நீர்ச்சத்து குறையும்போது, போதுமான காற்று உள்ளே வருவது தடைபடும். இதனால் ஹிஸ்டமின் என்ற அலர்ஜியை உண்டாக்கும் புரதம் அதிகமாகி, நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும்.

சரும நோய்கள் :
நீரிழப்பினால் நச்சுக்கள் வெளியேகாமல் சருமத்தின் உள்ளடுக்களிலேயே தங்கும். ரத்தமும் அசுத்தமாகிவிடும். இதன் எதிரொலியாக சரும வியாதிகள் உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அதிகமாகும் :
போதுமான நீரில்லாதபோது கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் உடலிலேயே தங்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும். இதனால் உடல் பருமன், இதய நோய்களுக்கான ஆபத்துகள் தாக்கும்.

ஜீரண சக்தி பாதிக்கும் :
ஜீரண சக்தி கடுமையாக குறைந்துவிடும். அல்சர், நெஞ்செரிச்சல் ஆகியவைகள் உண்டாகும்.

சிறு நீரகம் கோளாறுகள்:
சிறு நீரகத்தில் வந்தடையும், கழிவுகள், நச்சுக்கள் வெளியேற முடியாது. இதனால் தொற்று நோய்கள் தாக்கும். அதோடு கரையாத மினரல்கள் சிறு நீரகத்திலேயே தங்கி, கற்களை உருவாக்கிவிடும். இதனால் பலப் பிரச்சனைகளைத் தரும்.

மலச்சிக்கல் :
நீர்ச்சத்து குறையும்போது மலக்குடலில் நெகிழ்வுத்தன்மை குறைந்து கெட்டிப்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி, பைல்ஸ் போன்ற வியாதிகளும் ரத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.



Click it and Unblock the Notifications











