Just In
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 2 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 3 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 3 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரைக் குடிப்பார்கள். இது உண்மையில் ஓர் ஆரோக்கியமான பழக்கம் தான். இருப்பினும் ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.
MOST READ: உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...
கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, நீங்கள் காலையில் காபி, டீ குடிப்பவராயின், அதைத் தவிர்த்து இனிமேல் சுடுநீரைக் குடியுங்கள்.
உறுப்புக்கள் சுத்தமாகும்
காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரை ஒரு டம்ளர் குடிப்பதல், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சீராக இருக்கும்.
மெட்டபாலிசம் மேம்படும்
ஒருவர் காலையில் சுடுநீரை முதல் வேளையாகப் பருகினால், அவரது மெட்டபாலிசம் மேம்படுத்தப்பட்டு, உடல் உறுப்புக்களின் இயக்கம் சீராக இருக்கும்.
வலிகள் குறையும்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் வயிற்று வலியால் கஷ்டப்படும் போது, சுடுநீர் ஓர் நல்ல நிவாரணியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சுடுநீர் வயிற்றுத் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலியைக் குறைக்கும். இது மாதவிடாய் வலிகள் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் இதர வலிகளையும் போக்கும்.
எடை குறையும்
உடல் எடை அதிகம் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரைப் பருகுவதன் மூலம், உடலின் வெப்பநிலை அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
முக்கியமாக சுடுநீரை அதிகாலையில் பருகுவதன் மூலம், உடலில் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முதுமை தடுக்கப்படும்
இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக எத்தனையோ க்ரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கண்டதைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுடுநீரை தினமும் பருகி வந்தால், விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கலாம்.
செரிமானம் மேம்படும்
முக்கியமாக சுடுநீரை காலையில் பருகி வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படாமலும் இருக்கும்.