Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
நீரிழிவு நோயின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் - அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியது!!!
பொதுவாக நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்று, அதிக பசி எடுப்பது, உடல் சோர்வு ஏற்படுவது, நாவறட்சி ஏற்படுவது, நிறைய சிறுநீர் வெளியேறுவது என்று பலவன கூறப்படுகையில். இது மட்டுமல்லாது, இன்னும் சில வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் அறிகுறிகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
இந்த அறிகுறிகளை வைத்து விரைவாக உங்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்று நீங்களே கண்டறிந்துவிடலாம் என்றும் கூறுப்படுகிறது. இனி, நீரிழிவு நோயின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் என்னென்னவென்று தெரிந்துக் கொள்ளலாம்...

சிறுநீரில் மாற்றம் ஏற்படுதல்
நீங்கள் சிறுநீர் சென்று வந்த பிறகு கழிவறை பகுதியில் எறும்புகள் அதிகமாக வந்தால், உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து இருக்கிறது என்பதற்கான அறிகுறியாம். இதை வைத்து நீங்கள் முன்னவே நீரிழிவு நோய் குறித்த பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

களைப்பு
அதிக வேலைபாடுகள் அல்லது தூக்கமின்மை என எந்த காரணமும் இன்றி நீங்கள் களைப்பாக உணர்வதும் கூட நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தானாம். தொடர்ந்து இதுபோல எந்த காரணமும் இன்றி களைப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுக மறக்க வேண்டாம்.

காலில் தசைப்பிடிப்பு
நீரிழிவு நோய் ஏற்பட்டால், காயம் சரி ஆக நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். அதே போல நீரிழிவு நோய் ஏற்பட்டால், அடிக்கடி காலில் தசைப்பிடிப்பு ஏற்படும் என்றும் புதியதாக கூறுகின்றனர். இது, அதிகப்படியான இரத்த சர்க்கரையின் காரணமாக ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

பசியின்மை
அதிகமாக பசி எடுப்பதை போலவே, பசியின்மையும் நீரிழிவு நோய்க்கான ஓர் அறிகுறியாம்.

புடைத்த கண்கள்
இராத்திரி மூக்குமுட்ட குடித்தால் மட்டுமல்ல நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டாலும் கண்கள் புடைத்தது போன்று காட்சியளிக்கும் என்று கூறுகின்றனர். எனவே, இது போன்ற அறிகுறிகளும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் மறக்காமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications











