Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!!
வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.
எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப வெற்றிலை போடுங்க...
வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.
வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!
பல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இருமல்
15 வெற்றிலைகள் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெற்றிலையை நன்றாக அலசி நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை தேன் சேர்த்து அருந்தலாம்.

மூச்சுக்குழாய் அழற்சி
7 வெற்றிலையை கற்கண்டு கொண்டு நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் ஆக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்துக் கொள்ளவும்.

உடல் நாற்றத்தை அகற்ற
5 வெற்றிலையை எடுத்துக் கொண்டு இரண்டு கப் நீரில் கொதிக்க விட வேண்டும். ஒரு குவளை அளவாக அதனை வற்ற விட வேண்டும். அதனை மதிய வேளையில் குடித்து வரவும்.

தீப்புண்
சிறிதளவு வெற்றிலையை எடுத்து, அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து, தீப் புண் பட்ட இடத்தில் போட வேண்டும்.

மூக்கில் இரத்தம் வடிதல்
கொழுந்து வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக கசக்கி சுருட்டி, மூக்கில் வைத்தால், மூக்கிலிருந்து இரத்தம் வருவது தடுக்கப்படும்.

அல்சர்
சிறிதளவு வெற்றிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது சட்டியை சுற்றி உருவாகும் சிறிய வெற்றிலை துண்டுகளை எடுத்து, உருண்டைகளாக்கி தினமும் இரு முறை உட்கொண்டு வரவும்.

கண் நமைச்சல் மற்றும் சிவந்த கண்
5-6 நற்பதமான, கொழுந்து வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறியவுடன் அந்த நீரைக் கொண்டு தினமும் மூன்று முறை என குணமாகும் வரைக் கண்களைக் கழுவி வர வேண்டும்.

புண் மற்றும் நமைச்சல்
20 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வெதுவெதுப்பாக புண் மற்றும் நமைச்சல் உள்ள இடங்களில் ஊற்றிக் கழுவவும்.

ஈறுகளில் இரத்தத்தை நிறுத்துதல்
நான்கு வெற்றிலையை இரண்டு கப் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வாயைக் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தவும்.

சீத பேதி
1-2 வெற்றிலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை வாயில் போட்டு நன்றாக சாறு வரும் வரை மென்று சாற்றினை விழுங்கி, பின் சக்கையை துப்பி விடவும்.

வாய் துர்நாற்றத்தை நீக்க
2-4 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை சூடான நீருடன் வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்தவும்.

முகப்பரு
7-10 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனை சூடான நீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை முகம் கழுவவும்.

வெள்ளைப்படுதல்
2.5 லிட்டர் நீரில் சுத்தம் செய்த 10 வெற்றிலையை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தி வெதுவெதுப்பான சூட்டில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும்.

தாய்ப்பால் அதிகரிப்பைக் குறைத்தல்
சில வெற்றிலையை எடுத்து கழுவிக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தடவி தீயில் நன்றாக வாட்டவும். வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் உள்ள வீக்கங்களில் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications