Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!
துளசிச் செடி ஒரு அருமையான மூலிகை மருந்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலவிதமான நோய்களுக்கு துளசிச் செடி ஒரு மருந்தாக விளங்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
சிறு வயதில் நமக்கு சாதாரண சளி, காய்ச்சல் வந்தாலும் துளசி இலைகளைக் கொண்டு நம் தாயார்கள் கசாயம் செய்து கொடுப்பார்கள். துளசியின் பெருமைகளையும் நமக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடத்தை வகிக்கும் துளசிச் செடியால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டால் ஆச்சரியமாக இருக்கும். நம்மில் பலருக்கும் தெரியாத இதுப்போன்ற சில பக்க விளைவுகள் குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

யூஜினால் ஓவர்டோஸ்
துளசியில் யூஜினால் என்ற பொருள் தான் அதிகம் உள்ளது. துளசியின் வாசனைக்கும் இதுதான் காரணம். ஆனால் அளவுக்கு அதிகமாகத் துளசியைச் சாப்பிடும் போது, அது விஷமாகக் கூட மாறி விடலாம் என்று கூறப்படுகிறது.
அறிகுறிகள்: இருமலின் போதும், சிறுநீர் கழிக்கும் போதும் இரத்தம் வருதல், மூச்சு விடுவதில் சிரமம்

இரத்தம் அடர்த்தியாகும்
நம் உடம்பில் இரத்த அணுக்களை குண்டக்க மண்டக்கப் அதிகரிக்கச் செய்யும் வலிமை துளசிக்கு உள்ளது. எனவே, இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அறிகுறிகள்: மாதவிடாயின் போது இரத்தம் அதிகம் வெளிப்படுதல்

இரத்தத்தில் சர்க்கரை குறையும்
இரத்தத்தில் அசாதாரணமாக சர்க்கரையின் அளவு குறைவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், இது நோயல்ல! நீரிழிவு ஏற்பட்டிருப்பவர்கள் துளசி அல்லது துளசி கலந்த மருந்தை சாப்பிட்டால் இரத்தத்தின் அளவு மளமளவெனக் குறையும். இது மிகவும் ஆபத்தானது.
அறிகுறிகள்: உடல் வெளிறுதல், மயக்கம் வருதல், பசி எடுத்தல், உடல் தளர்தல்

விந்தணுக்கள் குறையும்
அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களிடம் விந்தணுக்கள் குறைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் கரு உருவாவதில் பாதிப்பு ஏற்படும். முயல்களின் மூலம் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு
கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாகத் துளசிச் செடியை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். குழந்தை பிறப்பு அல்லது மாதவிடாயின் போது கூட பாதிப்புகள் ஏற்படலாம்.
அறிகுறிகள்: முதுகு வலி, வயிற்றுப் போக்கு, அதிக இரத்தம் வெளிப்படுதல்

துளசியும் மருந்துகளும்
நம் உடலில் இயல்பாக உற்பத்தியாகும் மருந்துகளுடன் துளசி சேரும் போது பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் நொதிகள் உருவாக்கும் 'சைட்டோக்ரோம் பி450', இரத்தத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும். வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குறைப்பதில் டயஸெப்பம் மற்றும் ஸ்கோபோலமைன் ஆகிய மருந்துகள் உதவுகின்றன. இந்த மருந்துகளால் ஏற்படும் அம்னெசிக் விளைவை துளசிச் செடி குறைத்து விடலாம்.
அறிகுறிகள்: நெஞ்சு இரைச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு



Click it and Unblock the Notifications