Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் தூங்கினால் டிமென்ஷியா நோய் வரும் தெரியுமா?
அடர்த்தியான முடியை பெற ஆரோக்கியமான உணவுகள்
உடல் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு தான் தூக்கம். இந்த தூக்கம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் நாம் பாதியளவு ஆரோக்கிய நன்மைகளை அடைந்துவிடலாம். நம்மில் சிலர் மட்டுமே சரியான அளவு நேரம் தூங்குகின்றனர். பெரும்பான்மையானோர், மிகக்குறைந்த நேரம் அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மிக குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது பல ஆரோக்கிய சீர்கெடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும், ஆனால் மிக அதிக நேரம் தூங்குவதும் கூட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த பகுதியில் மிக அதிகநேரம் தூங்குவதால் உண்டாகும் டிமென்ஷியா என்ற நோய் பற்றி காணலாம்.

பாதிக்கப்பட்டவர்கள்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது மட்டும் உலகளவில் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகின்ற 2050-ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்சீமர் நோய்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் அல்சீமர் நோய் என்ற நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் இந்த அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியாவால் உயிரிழந்துள்ளனர்.

கார்வாஸ்குலர் நோய்
1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 30 முதல் 62 வயதிற்குற்பட்ட 5,209 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இவர்களுக்கு கார்வாஸ்குலர் இருதய நோய் வருவதற்கான அபாயம் அதிகரித்திருந்தது அந்த ஆய்வில் அறியப்பட்டது.

9 மணிநேரம்
மக்கள் தூங்கும் நேரத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிந்திக்கும் திறன்
நீண்ட நேரம் தூங்குவதால், மூளையின் செயல்பாடு குறைகிறது, அதுமட்டுமின்றி சிந்திக்கும் திறனும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











