Just In
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 4 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் தூங்கினால் டிமென்ஷியா நோய் வரும் தெரியுமா?
அடர்த்தியான முடியை பெற ஆரோக்கியமான உணவுகள்
உடல் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு தான் தூக்கம். இந்த தூக்கம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் நாம் பாதியளவு ஆரோக்கிய நன்மைகளை அடைந்துவிடலாம். நம்மில் சிலர் மட்டுமே சரியான அளவு நேரம் தூங்குகின்றனர். பெரும்பான்மையானோர், மிகக்குறைந்த நேரம் அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மிக குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது பல ஆரோக்கிய சீர்கெடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும், ஆனால் மிக அதிக நேரம் தூங்குவதும் கூட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த பகுதியில் மிக அதிகநேரம் தூங்குவதால் உண்டாகும் டிமென்ஷியா என்ற நோய் பற்றி காணலாம்.
பாதிக்கப்பட்டவர்கள்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது மட்டும் உலகளவில் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகின்ற 2050-ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்சீமர் நோய்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் அல்சீமர் நோய் என்ற நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் இந்த அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியாவால் உயிரிழந்துள்ளனர்.
கார்வாஸ்குலர் நோய்
1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 30 முதல் 62 வயதிற்குற்பட்ட 5,209 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இவர்களுக்கு கார்வாஸ்குலர் இருதய நோய் வருவதற்கான அபாயம் அதிகரித்திருந்தது அந்த ஆய்வில் அறியப்பட்டது.
9 மணிநேரம்
மக்கள் தூங்கும் நேரத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிந்திக்கும் திறன்
நீண்ட நேரம் தூங்குவதால், மூளையின் செயல்பாடு குறைகிறது, அதுமட்டுமின்றி சிந்திக்கும் திறனும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.