Latest Updates
-
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 04-ல் நிகழும் சுக்கிரன்-கேது சேர்க்கை இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம் -
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம்
ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் தூங்கினால் டிமென்ஷியா நோய் வரும் தெரியுமா?
அடர்த்தியான முடியை பெற ஆரோக்கியமான உணவுகள்
உடல் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு தான் தூக்கம். இந்த தூக்கம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் நாம் பாதியளவு ஆரோக்கிய நன்மைகளை அடைந்துவிடலாம். நம்மில் சிலர் மட்டுமே சரியான அளவு நேரம் தூங்குகின்றனர். பெரும்பான்மையானோர், மிகக்குறைந்த நேரம் அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மிக குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது பல ஆரோக்கிய சீர்கெடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும், ஆனால் மிக அதிக நேரம் தூங்குவதும் கூட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த பகுதியில் மிக அதிகநேரம் தூங்குவதால் உண்டாகும் டிமென்ஷியா என்ற நோய் பற்றி காணலாம்.

பாதிக்கப்பட்டவர்கள்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது மட்டும் உலகளவில் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகின்ற 2050-ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்சீமர் நோய்
அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் அல்சீமர் நோய் என்ற நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் இந்த அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியாவால் உயிரிழந்துள்ளனர்.

கார்வாஸ்குலர் நோய்
1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 30 முதல் 62 வயதிற்குற்பட்ட 5,209 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இவர்களுக்கு கார்வாஸ்குலர் இருதய நோய் வருவதற்கான அபாயம் அதிகரித்திருந்தது அந்த ஆய்வில் அறியப்பட்டது.

9 மணிநேரம்
மக்கள் தூங்கும் நேரத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிந்திக்கும் திறன்
நீண்ட நேரம் தூங்குவதால், மூளையின் செயல்பாடு குறைகிறது, அதுமட்டுமின்றி சிந்திக்கும் திறனும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications