Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
பல நோய்களையும் குணப்படுத்தும் அகத்திக்கீரை! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
தாவர வகைகளில் கீரைகள் மிக சத்துள்ளவையாகும். ஆனால் நாம் இவற்றை மிகக்குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அகத்திக்கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பகுதியில் அகத்திக்கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.

மலச்சிக்கல்
பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திப்பூவைச் சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

இருமல் பிரச்சனை
அகத்தி கீரையின் இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

வயிற்று வலி
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

புண்கள்
அகத்தி இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து கட்டுப்போட்டால் புண்கள் ஆறும்.

பால் சுரப்பு
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

தலைவலி
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும்.



Click it and Unblock the Notifications