பல நோய்களையும் குணப்படுத்தும் அகத்திக்கீரை! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

By Lakshmi

தாவர வகைகளில் கீரைகள் மிக சத்துள்ளவையாகும். ஆனால் நாம் இவற்றை மிகக்குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அகத்திக்கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பகுதியில் அகத்திக்கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திப்பூவைச் சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

இருமல் பிரச்சனை

இருமல் பிரச்சனை

அகத்தி கீரையின் இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

வயிற்று வலி

வயிற்று வலி

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

புண்கள்

புண்கள்

அகத்தி இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து கட்டுப்போட்டால் புண்கள் ஆறும்.

பால் சுரப்பு

பால் சுரப்பு

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

தலைவலி

தலைவலி

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, September 8, 2017, 17:50 [IST]
Desktop Bottom Promotion