Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பல நோய்களையும் குணப்படுத்தும் அகத்திக்கீரை! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
தாவர வகைகளில் கீரைகள் மிக சத்துள்ளவையாகும். ஆனால் நாம் இவற்றை மிகக்குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அகத்திக்கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பகுதியில் அகத்திக்கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.

மலச்சிக்கல்
பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திப்பூவைச் சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

இருமல் பிரச்சனை
அகத்தி கீரையின் இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

வயிற்று வலி
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

புண்கள்
அகத்தி இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து கட்டுப்போட்டால் புண்கள் ஆறும்.

பால் சுரப்பு
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

தலைவலி
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும்.



Click it and Unblock the Notifications