Just In
- just now கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- 1 hr ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 2 hrs ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பல நோய்களையும் குணப்படுத்தும் அகத்திக்கீரை! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
தாவர வகைகளில் கீரைகள் மிக சத்துள்ளவையாகும். ஆனால் நாம் இவற்றை மிகக்குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அகத்திக்கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பகுதியில் அகத்திக்கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.
மலச்சிக்கல்
பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திப்பூவைச் சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.
இருமல் பிரச்சனை
அகத்தி கீரையின் இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
வயிற்று வலி
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
புண்கள்
அகத்தி இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து கட்டுப்போட்டால் புண்கள் ஆறும்.
பால் சுரப்பு
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
தலைவலி
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும்.