Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
கொத்தமல்லியை இப்படி பயன்படுத்தினால் வயிற்று கோளாறுகள் அகலும்!
கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
நமக்கு அனைத்து காலகட்டத்திலும், மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும். இதனை பெரும்பாலும் தினமும் கூட சமையலில் பயன்படுத்திவருகிறோம். இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ள அதிசயிக்கத்தக்க மருந்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சருமத்திற்கு..
கொத்தமல்லியை பேஸ்டாக செய்து சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். புதினா, குப்பை மேனி போன்றவற்றை முகத்திற்கு எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல கொத்தமல்லியை பயன்படுத்தலாம். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.

கண்களுக்கு
கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிர்ச்சியான தோற்றத்தை தரக்கூடியது. இவற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.

வயிற்று கோளாறுகள்
வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது. இது இரலை பலப்படுத்துகிறது. உணவிற்கு மனத்தை தந்து இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது. இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

தனியா தேநீர்
கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் உடலில் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். இதனை தடுக்க இந்த இந்த தனியா தேநீர் பயன்படுகிறது.

வாயு பிரச்சனை
தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.



Click it and Unblock the Notifications