Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
கொத்தமல்லியை இப்படி பயன்படுத்தினால் வயிற்று கோளாறுகள் அகலும்!
கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
நமக்கு அனைத்து காலகட்டத்திலும், மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும். இதனை பெரும்பாலும் தினமும் கூட சமையலில் பயன்படுத்திவருகிறோம். இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ள அதிசயிக்கத்தக்க மருந்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சருமத்திற்கு..
கொத்தமல்லியை பேஸ்டாக செய்து சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். புதினா, குப்பை மேனி போன்றவற்றை முகத்திற்கு எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல கொத்தமல்லியை பயன்படுத்தலாம். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.

கண்களுக்கு
கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிர்ச்சியான தோற்றத்தை தரக்கூடியது. இவற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.

வயிற்று கோளாறுகள்
வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது. இது இரலை பலப்படுத்துகிறது. உணவிற்கு மனத்தை தந்து இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது. இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

தனியா தேநீர்
கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் உடலில் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். இதனை தடுக்க இந்த இந்த தனியா தேநீர் பயன்படுகிறது.

வாயு பிரச்சனை
தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.



Click it and Unblock the Notifications











