Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கொத்தமல்லியை இப்படி பயன்படுத்தினால் வயிற்று கோளாறுகள் அகலும்!
கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
நமக்கு அனைத்து காலகட்டத்திலும், மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும். இதனை பெரும்பாலும் தினமும் கூட சமையலில் பயன்படுத்திவருகிறோம். இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ள அதிசயிக்கத்தக்க மருந்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சருமத்திற்கு..
கொத்தமல்லியை பேஸ்டாக செய்து சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். புதினா, குப்பை மேனி போன்றவற்றை முகத்திற்கு எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல கொத்தமல்லியை பயன்படுத்தலாம். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.

கண்களுக்கு
கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிர்ச்சியான தோற்றத்தை தரக்கூடியது. இவற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.

வயிற்று கோளாறுகள்
வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது. இது இரலை பலப்படுத்துகிறது. உணவிற்கு மனத்தை தந்து இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது. இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

தனியா தேநீர்
கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் உடலில் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். இதனை தடுக்க இந்த இந்த தனியா தேநீர் பயன்படுகிறது.

வாயு பிரச்சனை
தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.



Click it and Unblock the Notifications