Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி நாளில் நிகழும் சந்திர கிரகணம்: இன்று இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
- 6 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. 1 கப் ரவையும், 1 கேரட்டும் இருந்தா இப்படி செய்யுங்க..
- 8 hrs ago Today Rasi Palan 25 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் அவசர முடிவு அவஸ்தையில் முடிய நேரிடலாம்...
- 13 hrs ago 1 வருடத்திற்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்தால் பண பெருகும்...
Don't Miss
- News "திசைமாறிய ஏவுகணை.." போலந்தில் பகீர்.! ரஷ்யாவுக்கு ஏன் இந்த வேலை .. சில நொடிகளில் பதறிய உலக நாடுகள்
- Movies வீரம் படத்தில் நடித்த சிறுமியா இது? அவங்க அம்மா இத்தனை விளம்பரங்களில் நடித்திருக்கிறாரா?
- Sports IPL 2024 : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த தேதி, நேரம்? எந்த அணியுடன்? முழு விவரம்
- Education அமெரிக்காவில் உயர்கல்வி பயில சிறந்த மாகாணம் எது ?
- Technology நிலவுக்கு புது பெயர் வைத்த மோடி.. 7 மாதத்திற்கு பிறகு ஓகே சொன்ன உலக நாடுகள்.. என்ன பெயர் தெரியமா?
- Finance பெரும் பணக்காரர்களை அடக்க இதுதான் சரியான வழி.. சூப்பர் டாக்ஸ்..!!
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் ரயில் நிலையங்களில் இதை பார்க்கலாம்! நேரடியா பணம் கொடுக்கமலேயே டிக்கெட் எடுக்கலாம்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?
காலை எழும்போதே முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
காலையில அடிச்சுப் புடிச்சு ஆபீஸ்க்கு போய் சேர்ந்தவுடன், சிஸ்டடை ஆன் செய்ய கீழே குனியும்போதே பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து மூஞ்சியை கோணலாக வைத்துக் கொண்டு லேசாக சிரிப்பது. உடனே பக்கத்துல இருக்கிறவரு என்னன்னு கேட்கிறது தான் தாமதம் அதுக்குள்ள, நைட்டு நல்லாதான் படுத்து தூங்கினேன். ஆனாலும் ரொம்ப டயர்டாவே இருக்கு. முதுகு வேற ரொம்ப வலிக்குத்துங்க என்று தினமும் புலம்புவர்கள் தான் அதிகம்.
எனக்குக் கூட அப்படிதான்ப்பா இருக்கு. இப்படித்தான் பக்கத்தில் இருப்பவரிடம் இருந்தும் பதில் வரும். சரி. இப்படி எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்.
எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்
இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன?
நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.
அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.
கழுத்து மற்றும் முதுகுவலி
உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.
தலையணை
பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.
முதுகின் கீழ்ப்பகுதி வலி?
ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.
குப்புறப்படுத்தல்
அதேபோல் மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. முதுகின் கீழ்ப் பகுதியில் வலி உள்ளவர்கள் கட்டாயமாகக் குப்புறப்படுத்துத் தூங்கக் கூடாது. அப்படி தூங்கினால் வலி தான் அதிகமாகும். தவிர கழுத்தில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கச் செய்யும்.
முதுகின் நடுப்பகுதி
நாற்காலியில் உட்காரும்பொழுது முன்புறமாகக் குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ அல்லது இடது புறத்திலோ சாய்ந்து உட்காருவது, நடக்கின்ற பொழுது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் உங்களுடைய முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதனால் நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தபடியோ தூங்கப் பழகிக் கொண்டால் இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.
உட்காரும் நிலை
நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்.