Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?
இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.
இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.

இந்த தே நீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வெறு உபாதைகள் குணப்படுத்தபப்டுகின்றன.
இன்னும் இந்த டீயைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவற்றை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் பால் :
பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தே நீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.

சீரகம் :
சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீஅல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோயய் செல்களை அழிக்கும்.

பெருஞ்சீரகம் :
இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.

மஞ்சள் :
மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தோற்றை அழிக்கும்.
இப்போது அந்த அற்புத தே நீரை எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :
மிளகு - 4
பாதாம் பால் - 1 கப்
மஞ்சள் - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.

தயாரிக்கும் முறை:
நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.
வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.



Click it and Unblock the Notifications