Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சிறுநீர் பாதையில் தொற்றா? உடனே கவனியுங்க!!!
சிறு நீர்பாதையில் தொற்று ஏற்படுவது சாதரணமானதே. ஆனால் அதை அலட்சியமாக விட்டுவிட்டால் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உடனே அதனை சரிபடுத்த வேண்டும்.இதற்காக மருத்துவரிடம் போக வேண்டுமென்பதில்லை.சிறு நீர் தொற்றினை எளிதில் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

சிறு நீர் தொற்று எவ்வாறு உருவாகிறது?
நீர் போதிய அளவில் குடிக்காவிட்டால்,கிட்னி கிருமிகளை முழுவதும் வெளியேற்றாது. இதனால் கிருமிகள் அதன் பாதைகளிலேயே தங்கிவிடும்.சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகி அதனால் தொற்று ஏற்படுகிறது.
சுத்தமாக இல்லாவிட்டாலும்,அல்லது அமிலத்தன்மை அதிகமாக சிறு நீரகத்தில் உருவாகும்போதும் பேக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படும்.பெண்களுக்கே அதிக அளவில் இந்த தொற்று ஏற்படும்.குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கும்.
அதன் அறிகுறிகள்:
அடிவயிறு வலிக்கும்.அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டும் என்பது போலிருக்கும்.ஆனால் மிகச் சிறிய அளவே வெளியேறும்.அப்போது எரிச்சலும் கடுப்பும் ஏற்படும். கூடவே காய்ச்சல்,குமட்டல் ஆகியவை ஏற்படும்.
அதற்கான தீர்வுகள்:
சோடா உப்பு :
ஒரு ஸ்பூன் சோடா உப்பினை ஒரு கப் நீரில் கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். சோடா உப்பு காரத்தன்மை கொண்டது. இது சிறு நீரகத்தில் உருவாகும் அமிலத்தன்மையை சமன் செய்து, எரிச்சலை குறைக்கும். பேக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்துகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுவகைகள் :
அமிலம் அதிகமாக உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு,எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் ,உணவு வகைகள்,மது,காபி ஆகியவை அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்யும். எனவே பேக்டீரியாக்கள் பெருகி, எரிச்சலை அதிகமாக்கும்.
சீமை களாக்காய் :
இது கிருமிகளை வெளியேற்றி, மேலும் அவைகளை பெருகவிடாமல் கட்டுப்படுத்துகிறது.எனவே சீமை களாக்காயை ஜூஸாகவோ அல்லது மருந்தகங்களில் கிடைக்கும் மாத்திரை வடிவமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி :
அன்னாசி சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுக்கு சிறந்த நிவாரணமாகும்.அதிலுள்ள புரோமெலைன் என்ற என்சைம் கிருமிகளை அழிக்கிறது.அதனை ஜூஸாகவோ அல்லது அப்படியாகவோ தினமும் எடுத்துக் கொண்டால் சிறு நீரகத் தொற்றினைக் கட்டுபடுத்தலாம்.
பியர் பெர்ரி பழங்கள் :
பியர் பெர்ரி பழங்கள் மூலிகை வகைகளைச் சேர்ந்தது. அவை சிறு நீரகத்தை முழுவதும் சுத்தப்படுத்தி, கிருமிகளை வெளியேற்றுகிறது.இது தொற்று வராமல் காக்கும் என சொல்லமுடியாது. ஆனால் இது தொற்றினைப் போக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் மிக முக்கியமான குறிப்பு சிறு நீர் தொற்று ஏற்படும் போது இரண்டு மடங்கு நீர் குடிக்க வேண்டும்.அப்போதுதான் கிட்னி கிருமிகளை வெளியேற்றும். சிறு நீர் மற்றும் அதன் பாதையில் ஏற்படும் தொற்றினிய எளிதில் குணப்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை வீட்டில் பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




