Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
சிறுநீர் பாதையில் தொற்றா? உடனே கவனியுங்க!!!
சிறு நீர்பாதையில் தொற்று ஏற்படுவது சாதரணமானதே. ஆனால் அதை அலட்சியமாக விட்டுவிட்டால் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உடனே அதனை சரிபடுத்த வேண்டும்.இதற்காக மருத்துவரிடம் போக வேண்டுமென்பதில்லை.சிறு நீர் தொற்றினை எளிதில் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

சிறு நீர் தொற்று எவ்வாறு உருவாகிறது?
நீர் போதிய அளவில் குடிக்காவிட்டால்,கிட்னி கிருமிகளை முழுவதும் வெளியேற்றாது. இதனால் கிருமிகள் அதன் பாதைகளிலேயே தங்கிவிடும்.சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகி அதனால் தொற்று ஏற்படுகிறது.
சுத்தமாக இல்லாவிட்டாலும்,அல்லது அமிலத்தன்மை அதிகமாக சிறு நீரகத்தில் உருவாகும்போதும் பேக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படும்.பெண்களுக்கே அதிக அளவில் இந்த தொற்று ஏற்படும்.குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கும்.
அதன் அறிகுறிகள்:
அடிவயிறு வலிக்கும்.அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டும் என்பது போலிருக்கும்.ஆனால் மிகச் சிறிய அளவே வெளியேறும்.அப்போது எரிச்சலும் கடுப்பும் ஏற்படும். கூடவே காய்ச்சல்,குமட்டல் ஆகியவை ஏற்படும்.
அதற்கான தீர்வுகள்:
சோடா உப்பு :
ஒரு ஸ்பூன் சோடா உப்பினை ஒரு கப் நீரில் கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். சோடா உப்பு காரத்தன்மை கொண்டது. இது சிறு நீரகத்தில் உருவாகும் அமிலத்தன்மையை சமன் செய்து, எரிச்சலை குறைக்கும். பேக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்துகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுவகைகள் :
அமிலம் அதிகமாக உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு,எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் வகை பழங்கள் ,உணவு வகைகள்,மது,காபி ஆகியவை அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்யும். எனவே பேக்டீரியாக்கள் பெருகி, எரிச்சலை அதிகமாக்கும்.
சீமை களாக்காய் :
இது கிருமிகளை வெளியேற்றி, மேலும் அவைகளை பெருகவிடாமல் கட்டுப்படுத்துகிறது.எனவே சீமை களாக்காயை ஜூஸாகவோ அல்லது மருந்தகங்களில் கிடைக்கும் மாத்திரை வடிவமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி :
அன்னாசி சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுக்கு சிறந்த நிவாரணமாகும்.அதிலுள்ள புரோமெலைன் என்ற என்சைம் கிருமிகளை அழிக்கிறது.அதனை ஜூஸாகவோ அல்லது அப்படியாகவோ தினமும் எடுத்துக் கொண்டால் சிறு நீரகத் தொற்றினைக் கட்டுபடுத்தலாம்.
பியர் பெர்ரி பழங்கள் :
பியர் பெர்ரி பழங்கள் மூலிகை வகைகளைச் சேர்ந்தது. அவை சிறு நீரகத்தை முழுவதும் சுத்தப்படுத்தி, கிருமிகளை வெளியேற்றுகிறது.இது தொற்று வராமல் காக்கும் என சொல்லமுடியாது. ஆனால் இது தொற்றினைப் போக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் மிக முக்கியமான குறிப்பு சிறு நீர் தொற்று ஏற்படும் போது இரண்டு மடங்கு நீர் குடிக்க வேண்டும்.அப்போதுதான் கிட்னி கிருமிகளை வெளியேற்றும். சிறு நீர் மற்றும் அதன் பாதையில் ஏற்படும் தொற்றினிய எளிதில் குணப்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை வீட்டில் பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
















