For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவில் தரும் மூலிகை நீரில் அப்படி என்னதான் கலக்கறாங்கனு தெரியனுமா? இதப் படிங்க!!

சொர்க்கம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த அதிசய மரத்தை பாருங்க!!

By Gnaana
|

மரங்கள், இயற்கையின் அதிசயங்கள், ஒவ்வொரு மரத்துக்கும், ஒவ்வொரு குணாதிசயம் உண்டு, சில மரங்கள், குளிர்ச்சியான சூழலில் மட்டும் வளரும், சில வெப்பமண்டலத்தில் மட்டுமே வளரும், சில சமவெளிகளில் வளராமல், உயரமான மலைகளில் மட்டும் வளரும், இது போன்று, ஏராளமான மரங்கள் உண்டு, உலகில்.

சமவெளிகளில், மற்றும் அனைத்து மண் வகைகளிலும், வளரும் ஒரு மரம் தான், சைமரூபா மரம். வெளிநாடுகளில் வளர்ந்த மரம், நமது தேசத்தில், கேரள, கர்நாடக மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப் படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படும் சைமரூபா மரம், மண்ணை வளப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக்கும்.

How to use Paradise Tree as an ayurvedic medicine

அதோடு மட்டுமல்லாமல், காற்றில் உள்ள கார்பனை கிரகித்து, அதிக அளவில் பிராண வாயுவை வெளிப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து, பூமி வெப்பமாவதைக் குறைக்கும் மரம். மனிதர்களுக்கு நல்ல காற்றை அளிக்கும் மரம், என்று பல சிறப்புகள், சைமரூபா மரத்துக்கு இருக்கிறது.

பொதுவாக, விதைகள் மூலம் வளரும் சைமரூபா மரம், விதைத்து மூன்றாண்டுகளில், பூக்கும் பருவத்தை அடையும். அடுத்த சில ஆண்டுகளில், காய்க்க ஆரம்பிக்கும்.

நீண்ட கிளைகளில், அடர் பச்சை வண்ணத்தில் செழுமையான மாவிலைகள் போன்றத் தோற்றத்தில் இலைகளைக் கொண்ட இந்த மரங்களின் காய்கள், கரு நீல வண்ணத்திலோ அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலோ காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use Paradise Tree as an ayurvedic medicine

How to use Paradise Tree as an ayurvedic medicine
Story first published: Tuesday, November 28, 2017, 12:52 [IST]
Desktop Bottom Promotion