Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தலைவலி, காய்ச்சல் மாதிரியான் பிரச்சனைகளுக்கு எந்த ஹெர்பல் சரியான சாய்ஸ் தெரியுமா?
தலைவலி, காய்ச்ச, ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மாதிரியான மூலிகைகள் பயன்படுத்தினால் பலன் தெரியும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
நிறைய மூலிகைகள் இதற்குதான் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் பயன்படுத்துகிறோம். இதனால் அவற்றின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகின்றன.

மூலிகைகளின் பலன்கள் மதிப்பற்றது. குறிப்பாக சாதரணமாக இருமல் காய்ச்சல் தலைவலிக்கு உடனே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை மிகச் சாதரணமாக கிடைக்கும் மூலிகைகளே அருமையாக செயல்புரியும்.
எந்த மாதிரியான மூலிகைகள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் இங்கே.

லாவெண்டர் :
லாவெண்டர் அருமையான மூலிகை. இதன் இதழ்களை தட்டி பின் சுடு நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, மூக்கடைப்பு விலகும் என்று லண்டனில் புகழ் பெற்ற ஆர்கானிக் ஃபார்மஸியை உருவாக்கிய மார்கோ மரோன் கூறியுள்ளார்.

எலுமிச்சை இலை :
எலுமிச்சை இலையை சரும அலர்ஜிக்கு அருமையான மருந்தாகும். வண்டு போன்ற பூச்சிக் கடிக்கு எலுமிச்சை இலையை பறித்து தடவினால் வீக்கம் குறையும். விஷத்தன்மை முறியும்.

பார்ஸ்லி :
பார்ஸ்லி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். செல்களுக்கு ஊக்கம் தரும். வெறும் வாயில் மெல்வதால் வாய் துர் நாற்றத்தை போக்கலாம்.

ரோஸ்மெரி :
ரோஸ்மெரி யில் தேநீர் தயாரித்து குடிப்பதால் பருவ நிலை மாற்றம் காரணமாக வரும் நோய்களை தடுக்கலாம். குணப்படுத்தவும் முடியும். குளிர்காலத்தில் உண்டாகுகம் நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழை :
கற்றாழையிலுள்ள சதைபகுதியை சாதரணமாக கழுவி உண்பதால் அல்சர் அதிகமாகும். அதனை பலமுறை குறிப்பாக 7 முறையாவது கழுவிய பின் அதனை உண்டால் அல்சர் குணமாகும். வயிற்றுப் புண்களை ஆற்றும். பாதிப்படைந்த சரும செல்களை சீராக்கும்.

கற்பூர வல்லி :
மிகச் சிறந்த நிவாரணி. இதனை அப்படிய் மென்று சாபிடுவதால் கபம் கரையும். இல்லையென்ராலும் இதனைக் கொண்டு தே நீர் தயாரித்து குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications