Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
தலைவலி, காய்ச்சல் மாதிரியான் பிரச்சனைகளுக்கு எந்த ஹெர்பல் சரியான சாய்ஸ் தெரியுமா?
தலைவலி, காய்ச்ச, ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மாதிரியான மூலிகைகள் பயன்படுத்தினால் பலன் தெரியும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
நிறைய மூலிகைகள் இதற்குதான் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் பயன்படுத்துகிறோம். இதனால் அவற்றின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகின்றன.

மூலிகைகளின் பலன்கள் மதிப்பற்றது. குறிப்பாக சாதரணமாக இருமல் காய்ச்சல் தலைவலிக்கு உடனே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை மிகச் சாதரணமாக கிடைக்கும் மூலிகைகளே அருமையாக செயல்புரியும்.
எந்த மாதிரியான மூலிகைகள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் இங்கே.

லாவெண்டர் :
லாவெண்டர் அருமையான மூலிகை. இதன் இதழ்களை தட்டி பின் சுடு நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, மூக்கடைப்பு விலகும் என்று லண்டனில் புகழ் பெற்ற ஆர்கானிக் ஃபார்மஸியை உருவாக்கிய மார்கோ மரோன் கூறியுள்ளார்.

எலுமிச்சை இலை :
எலுமிச்சை இலையை சரும அலர்ஜிக்கு அருமையான மருந்தாகும். வண்டு போன்ற பூச்சிக் கடிக்கு எலுமிச்சை இலையை பறித்து தடவினால் வீக்கம் குறையும். விஷத்தன்மை முறியும்.

பார்ஸ்லி :
பார்ஸ்லி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். செல்களுக்கு ஊக்கம் தரும். வெறும் வாயில் மெல்வதால் வாய் துர் நாற்றத்தை போக்கலாம்.

ரோஸ்மெரி :
ரோஸ்மெரி யில் தேநீர் தயாரித்து குடிப்பதால் பருவ நிலை மாற்றம் காரணமாக வரும் நோய்களை தடுக்கலாம். குணப்படுத்தவும் முடியும். குளிர்காலத்தில் உண்டாகுகம் நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழை :
கற்றாழையிலுள்ள சதைபகுதியை சாதரணமாக கழுவி உண்பதால் அல்சர் அதிகமாகும். அதனை பலமுறை குறிப்பாக 7 முறையாவது கழுவிய பின் அதனை உண்டால் அல்சர் குணமாகும். வயிற்றுப் புண்களை ஆற்றும். பாதிப்படைந்த சரும செல்களை சீராக்கும்.

கற்பூர வல்லி :
மிகச் சிறந்த நிவாரணி. இதனை அப்படிய் மென்று சாபிடுவதால் கபம் கரையும். இல்லையென்ராலும் இதனைக் கொண்டு தே நீர் தயாரித்து குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications