Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்!
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாடு, பெண்களுக்கு முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் போன்றவையும் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறி தான்
குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவது இயல்பு. ஆனால், சிலருக்கு வியர்த்துக் கொட்டும் வெயில் காலத்திலும் கூட காலை வேளையில் மூச்சு திணறல் ஏற்படும். இதை சுவாசக் கோளாறு என எண்ணி சாதாரணமாக இருக்க வேண்டாம், உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி இது.
இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாடு, பெண்களுக்கு முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் போன்றவையும் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!
இவை மட்டுமின்றி, கால்களில் வீக்கம், ஈறுகளில் இரத்த கசிவு, குறட்டை என சில வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாக தான் தென்படுகிறது....

தாம்பத்தியத்தில் பிரச்சனை
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு, தமனி சார்ந்த நோய்களை குறித்து வெளிப்படும் பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது. நமது உடலின் தமனிகளில் ஏற்படும் ப்ளாக் ஆண்மையை குறைத்து, இதய கோளாறு ஏற்பட காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.

மாதவிடாய்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் சீக்கிரமாக ஏற்படுவது இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணிகளாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் உழைப்பு
இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள் மத்தியில் உடல் உழைப்பு குறைந்து வருவது தான் இதற்கான பெரிய காரணியாக கருதப்படுகிறது.

குறட்டை
மூச்சு திணறல் ஏற்படுவதற்கான பொதுவான காரணி குறட்டை. இரவு முழுவதும் உறங்கியும், காலையில் தூக்கம் வருவது, சில நேரத்தில் உறங்கும் போது சுவாசிப்பதை நமக்கே தெரியாமல் நிறுத்துவது போன்றவை நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது. இதனால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது.

இதயத்துடிப்பு
மேலும், இது இதயத் துடிப்பு விகிதத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. எனவே, தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படுவதை சாதாரணமாக எண்ண வேண்டாம். உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

புண், வீக்கம் அல்லது ஈறுகளில் இரத்தம்
ஈறுகளில் இரதம் கசிவது ஈறு சார்ந்த பிரச்சனையாக மட்டுமின்றி, இதய நலன் குறைபாடாக கூட இருக்கலாம். இரத்தத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் முழுதும் பிரச்சனை ஏற்படுத்த வல்லது. அதிலும் முக்கியமாக தமனிவழியாக இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றை உண்டாகவும் இது காரணியாக அமையலாம்.

பல் மருத்துவர்
எனவே, ஈறுகள் அல்லது பற்களில் இரத்தம் கசிதல் ஏற்பட்டாலோ, மிகுதியான வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

கால்களில் வீக்கம்
இதயத்தில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாக கூட கால்களில் வீக்கம் தென்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கால்களில் வீக்கம்
சில சமயங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் கூட கால் வீக்கம் ஏற்படலாம். ஆனால், அது ஒரே இரவில் சரியாகிவிடும். நாட்கள் செல்ல செல்ல கால் வீக்கம் அதிகரிப்பது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

கழுத்து அல்லது தோள்பட்டை வலி
அனைவருக்குமே இதயத்தின் மீது ஓர் யானை உட்கார்ந்து அழுத்துவது போன்றோ, தோள்பட்டையை யாரோ பிழிந்து எடுப்பது உணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது மாரடைப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள்.

கழுத்து அல்லது தோள்பட்டை வலி
தொடர்ந்து, கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் வலி இருந்து கொண்டே இருப்பது இதய வலி அல்லது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூறப்படுகிறது.

நெஞ்செரிச்சல்
மேல் வயிறு பகுதியில் எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படுவது, தொடர்ந்து இரைப்பை அசௌகரியமாக உணர்தல், சில சமயத்தில் ஏன் என்றே தெரியாமல் விக்கல் எடுப்பது போன்றவை கூட இதய வலி அல்லது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

வியர்வை
குமட்டல், வியர்வை, மூச்சு தடைப்படுதல், தலை சுற்றல் போன்றவை ஏற்பட்ட சில மணி நேரத்தில் சிலருக்கு இதய வலி, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications