Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
உலகளவில் இதய நோய் இந்தியாவில்தான் அதிகம்! உங்களுக்கு தெரியுமா?
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 300 % சதவீதம் இதய நோய்கள் இந்தியாவில் அதிகமடைந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் விஷயம்.
இந்தியாவில் இதய நோயால் பெருமளவு மக்கள் பாதிக்கபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிருக்கின்றனர் என்று தாமஸ் அலக்ஸான்டர் என்ற மருத்துவர் இதயம் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக நடந்த கருத்தரங்கில் (STEMI) கூறியுள்ளார்.

இந்தியாவில் 60 மில்லியன் மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 மில்லியன் 40 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 10 மில்லியன் 30 வயதிற்கும் குறைவானவர்கள் என்று வருத்தமாக கூறியுள்ளார்.
மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் எனப்படும் (CAD) அர்த்ரோஸ்கெலரோஸிஸ் உயிருக்கு ஆபத்தை தருவிக்கும் நோய். உலக அளவில் உடல் நலம் சார்ந்த அமைப்பான WHO வின் கருத்துப்படி, இந்த நோயிலிருந்து தங்கள் உயிரினை காப்பாற்றிக் கொள்ள வருடத்திற்கு 3 மில்லியன் நோயாளிகள் போராடுகிறார்கள்.
STEMI என்ற இதய நோய்களின் விழிப்புணர்வு பற்றி கருத்தரங்கில் பல்வேறு மருத்துவர்கள் பங்குபெற்றனர். அனைவரும் இந்தியாவிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேவை புரிபவர்கள்.
இந்த கருத்தரங்கில், இதய அடைப்பு, மற்றும் மற்ற இதய பாதிப்புகளைப் பற்றிய விழுப்புணர்வை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றிய அறிவுரைகளை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும் மாரடைப்பு வந்தவுடன் முதலுதவி செய்வதற்கென 700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தென்னிந்தியா முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்படுவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமே என்று பெங்களூரு ஜயதேவா மருத்துவமனையின் டைரக்டர் மஞ்சு நாத் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

