Just In
- 34 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உடல் சோர்வை நீக்க, நரம்புகளின் வலிமையை உறுதியாக்க இத தினமும் சாப்பிடுங்க!
உங்கள் உணவில் வரகை (வரகு) தினமும் சேர்த்து வந்தால் உடல் சோர்வு நீங்கும், நரம்புகளின் வலிமை அதிகமாகும்.
நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவு தினசரி பழக்கத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. அரிசு உணவென்பது விழாக் காலங்களில் சேர்த்துக் கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகளை தான். அதனால் தான் அவர்கள் நாம் இன்று அஞ்சு நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலே இயற்கை மரணம் அடையும் பாக்கியம் பெற்றிருந்தனர்.
சரி, இனி வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி சோர்வை நீக்க முடியும், நரம்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும் என இங்கு காணலாம்...
3000 ஆண்டுகள்!
இந்தியாவில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு எனும் சிறுதானியத்தை பயிர் செய்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு தான் நமது உணவு பழக்கத்தில் மாற்றங்கள் உண்டாகின. இதன் பிறகு தான் மக்களின் ஆரோக்கியத்திலும் கேடுகள் அதிகரிக்க துவங்கின.
அமினோ அமிலங்கள் (புரதம்)
மொத்தம் 12 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் 11 வரகில் இருக்கிறது. அமினோ அமிலங்கள் தான் புரதம் என்று நாம் கூறுகிறோம். பயிறு மற்றும் பருப்பு வகை உணவுகளை சேர்த்து சமைத்தால் தான் முழு புரதசத்து உடலுக்கு கிடைக்கும்.
கழிவுகள் வெளியேறும்!
சிறு தானியங்களில் இருக்கும் காரத்தன்மை எளிதாக செரிமானாகி இரத்தத்தில் சத்துக்கள் உடனடியாக சேர உதவுகிறது. மேலும், இது மூளையின் செல்கள் ஆரோக்கியமாக வேலை செய்ய தூண்டுகிறது.
நுண்ணுயிர் கிருமிகள்!
நமது உடலில் இரண்டு வகையான கிருமிகள் உயிர்வாழும். ஒன்று உடல் பாகங்களுக்கு உதவி செய்யும். மற்றவை கேடு விளைவிக்கும். சிறுகுடல், பெருங்குடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர் கிருமிகளை அளிக்காமல் மற்ற நச்சுக்களை மற்றும் அழித்து நீக்கும் தன்மை கொண்டுள்ளது வரகு.
பிற நன்மைகள்!
- உடல் சோர்வை நீக்கும்
- நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும்
- மூட்டு வலி தடுக்கும்
- கண் பார்வை ஆரோக்கியம் அதிகரிக்கும்
- இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும்
- கொலஸ்ட்ரால் குறைக்கும்
- உயர் இரத்த அழுத்தம் தடுக்கும்.
- செல்களின் அழிவை குறைக்கும்.
நயாசின்!
வரகில் இருக்கும் நயாசின் தான் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
மேலும், இதனுடன் மக்னீசியம் சேர்ந்து இரத்த குழாய் விரிந்து, சுருங்கும் தன்மையை அளித்து இரத்த அழுத்தம் வராமல் இருக்க உதவுகிறது.