Just In
- 7 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 47 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குர்குர்ரே சாப்பிட்ட பிறகு ஈனோ குடித்த சென்னை மாணவர் அடுத்த நொடியே மரணம்?
சென்னையை சேர்ந்த +2 மாணவர், குர்குர்ரே சாப்பிட்டு பிறகு ஈனோ குடித்த அடுத்த நொடியே மரணம் அடைந்ததாக செய்தி ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் குர்குர்ரே சாப்பிட்ட பிறகு செரிமான கோளாறு ஏற்பட்டதாகவும், அதற்கு நிவாரணியாக ஈனோ கொடுத்த மறு நிமிடமே மரணம் அடைந்ததாக ஒரு செய்தி வைரலாக ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுக்குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியான செய்தி.
இதை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளார் மற்றும் திரைப்பட இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.
ஆனால், அந்த பதிவை அந்த மாணவனின் உறவினர் வேண்டுகோளுக்கு இணங்கி நீக்கியதாகவும், தான் முன்தினம் பதிவு செய்தது முற்றிலும் உண்மையானது என்றும் தனது மற்றொரு பதிவில் கூறியிருக்கிறார்.
நடந்தது என்ன?
ஸ்நாக்ஸ் மற்றும் அமில நீக்கி (Antacid) அடுத்தடுத்து உட்கொண்ட சென்னையை சேர்ந்த சிரிஷ் எனும் மாணவர் மரணம் அடைந்துள்ளார்.
இதயத்திற்கு செல்லும் இரத்தநாளத்தில் அதிக அழுத்தம் உண்டாகி, இரத்தநாளம் வெடித்து, வயிற்றில் இரத்த போக்கு உண்டாகி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மாணவனின் மரண சம்பவத்தை பற்றி பெற்றோர்கள் எதுவும் பேசவில்லை. போலீசிடமும் இதுகுறித்த எந்த ஒரு ரிப்போர்ட்டும் பதிவாகவில்லை.
ஜேம்ஸ் வசந்தன்!
ஜேம்ஸ் வசந்த் அவர்களது மகனின் வகுப்பில் உடன் பயிலும் மாணவன் தான் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர். இதை தனது நீக்கப்பட்ட பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டு இருந்தார் என சில தகவல்கள் கூறகின்றன.
கெமிக்கல் ரியாக்ஷன்!
ஒரு சில பயோ - கெமிக்கல்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் போது அது விஷத்தன்மையாக மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் செரிமான கோளாறு, வயிற்றுப்போக்கு, உயிரிழப்பு கூட உண்டாகலாம்.
உணவு மற்றும் ஆய்வு துறை!
இது உண்மையா? பொய்யா? என்பதை தாண்டி, இப்படி ஒரு சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து உட்கொள்ளும் போது அதனால் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உண்டா? அப்படி இருந்தால் அவை எந்தெந்த உணவு கலவைகள் என்பது பற்றி உணவு மற்றும் ஆய்வு துறையினர் ஆராய்ச்சி செய்து வெளியிட வேண்டியது அவசியம்.
அரிது!
இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக நிகழலாம் என்றாலும் கூட இழப்பது விலைமதிப்பற்ற உயிர் என்பதை கருத்தில் கொண்டு அரசும், ஆய்வு துறையினரும் இதற்கான நடவடிக்கையை உடனக்குடன் எடுக்க வேண்டியது அவசியம்.