Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஏன் கிராமங்களில் கம்பங் கஞ்சி குடிக்கிறார்கள் என தெரியுமா?
கம்பு ஆரோக்கியமான தானிய வகைகளில் ஒன்று. இது பல அற்புதமான சத்துக்களை கொண்டது. கம்பு சாதம், கம்பு கஞ்சி ஆகிய்வற்றை உண்டால் அதன் சத்துக்களை பெறலாம். அதன் நன்மைகளை காண்போம்.
வறட்சி காலத்திலும் விளையக் கூடியது கம்பு. எந்த மண்ணிலும் விளையும் தன்மை பெற்றது. பொதுவாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இது முக்கிய உணவாக இருக்கிறது. இது ஆப்பிரிக்காவில்தான் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.

சத்துக்கள் :
அது பல அருமையான சத்துக்களை கொண்டது கம்பிலுள்ள சத்துக்கள். தானியய்ங்களிலேயே அதிக அளவு புரத்ம் உள்ளது கம்பில் தான். பீட்டா கரோடினும் அதிக அளவு கம்பில் இருக்கிறது. 70 % நிறைவுறா கொழுப்பு அமிலம் கொண்டது. இவை உடலுக்கு மிகவும் முக்கிய சத்தாகும்.

கம்பங்கஞ்சி :
கிராமங்களில் கம்பங்கஞ்சி மிகவும் பிரபலம். இது அவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதில்லை. நாள் முழுவதும் வெயிலில் இருப்பதால் சோர்வு அவர்களை அண்டாமல் இருக்க அவர்கள் விரும்பி உண்கிறார்கள்.
ஆம் அவர்களுக்கு தேவையான கலோரியை கொடுத்து உடல் புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. அதனால்தான் அவர்கள் இரும்பை போல் பலத்துடன் இருக்கிறார்கள். இதன் நன்மைகளை காணலாம்.

அஜீரணம் :
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

உடல் வலுவிற்கு :
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்

குடல் புண்கள் :
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

கண்களுக்கு :
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.



Click it and Unblock the Notifications