Latest Updates
-
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம்
ஏன் கிராமங்களில் கம்பங் கஞ்சி குடிக்கிறார்கள் என தெரியுமா?
கம்பு ஆரோக்கியமான தானிய வகைகளில் ஒன்று. இது பல அற்புதமான சத்துக்களை கொண்டது. கம்பு சாதம், கம்பு கஞ்சி ஆகிய்வற்றை உண்டால் அதன் சத்துக்களை பெறலாம். அதன் நன்மைகளை காண்போம்.
வறட்சி காலத்திலும் விளையக் கூடியது கம்பு. எந்த மண்ணிலும் விளையும் தன்மை பெற்றது. பொதுவாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இது முக்கிய உணவாக இருக்கிறது. இது ஆப்பிரிக்காவில்தான் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.

சத்துக்கள் :
அது பல அருமையான சத்துக்களை கொண்டது கம்பிலுள்ள சத்துக்கள். தானியய்ங்களிலேயே அதிக அளவு புரத்ம் உள்ளது கம்பில் தான். பீட்டா கரோடினும் அதிக அளவு கம்பில் இருக்கிறது. 70 % நிறைவுறா கொழுப்பு அமிலம் கொண்டது. இவை உடலுக்கு மிகவும் முக்கிய சத்தாகும்.

கம்பங்கஞ்சி :
கிராமங்களில் கம்பங்கஞ்சி மிகவும் பிரபலம். இது அவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதில்லை. நாள் முழுவதும் வெயிலில் இருப்பதால் சோர்வு அவர்களை அண்டாமல் இருக்க அவர்கள் விரும்பி உண்கிறார்கள்.
ஆம் அவர்களுக்கு தேவையான கலோரியை கொடுத்து உடல் புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. அதனால்தான் அவர்கள் இரும்பை போல் பலத்துடன் இருக்கிறார்கள். இதன் நன்மைகளை காணலாம்.

அஜீரணம் :
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

உடல் வலுவிற்கு :
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்

குடல் புண்கள் :
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

கண்களுக்கு :
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.



Click it and Unblock the Notifications