Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
தினமும் காலையில் இந்த பொடியை நீரில் கலந்து குடிச்சா தொப்பை காணாமல் போயிடுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
உடல் எடையைக் குறைக்க உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புபவராயின், உங்களுக்காக ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆயுர்வேத பானம் குறித்து கீழே கொடுத்துள்ளோம்.
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல் அதிக எடையுடன் இருந்தால், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை அனைவருமே அறிவோம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பல்வேறு டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை பயன்படுத்துகின்றனர். நீங்களும் உடல் எடையைக் குறைக்க உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புபவராயின், உங்களுக்காக ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆயுர்வேத பானம் குறித்து கீழே கொடுத்துள்ளோம்.

எடை இழப்பு பானம்
சோம்பு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் போன்றவை நம் வீட்டு சமையலறையில் பொதுவாக காணப்படும் மசாலா பொருட்களாகும். இந்த பொருட்கள் அனைத்திலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான மருத்துவ பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த நான்கு பொருட்களும் ஆயுர்வேதத்தில் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நான்கு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத பொடி உடல் எடையை வேகமாக குறைக்க பெரிதும் உதவி புரியும்.

ஆயுர்வேத பொடியைத் தயாரிப்பது எப்படி?
சீரகம், சோம்பு, ஓமம் மற்றும் பெருங்காயத்தை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை லேசாக வறுத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் அரைத்த ஆயுர்வேத பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இது தவிர இந்த பொடியை, தினமும் சாப்பிடும் சாலட்டின் மீதும் தூவி சாப்பிடலாம்.

இந்த ஆயுர்வேத பொடி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
செரிமானம்
ஆயுர்வேத பொடியில் உள்ள பொருட்கள் அனைத்துமே செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தால், அவர் உடல் பருமனாகாமல் இருப்பார். எனவே இந்த ஆயுர்வேத பொடி செரிமானத்தை மேம்படுத்தும்.

மெட்டபாலிசம் மேம்படும்
ஒருவரது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த ஆயுர்வேத பொடியை உட்கொள்வதன் மூலம், உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும்.

பசியைக் கட்டுப்படுத்தும்
ஆயுர்வேத பொடியில் உள்ள பொருட்கள் அனைத்துமே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது.

கொழுப்புக்களைக் குறைக்கும்
ஆயுர்வேத பொடியில் உள்ள உட்பொருட்கள், உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவுகிறது. எனவே இந்த பொடியை தினமும் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வேகமாக குறைந்து, விரைவில் சிக்கென்ற உடலைப் பெற முடியும்.

இரத்த சர்க்கரை அளவு குறையும்
முக்கியமாக இந்த ஆயுர்வேத பொடி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து, உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இந்த ஆயுர்வேத பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications