Latest Updates
-
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இடுப்பளவை அதிகமாவதற்கு இதுதான் காரணம்னு ஆராய்ச்சி சொல்லுது!!
செயற்கை இனிப்பூட்டிகளால் உண்டாகும் பாதிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
உங்களது இடுப்பளவை கண்டு கவலையா? நீண்ட காலமாக எடை அதிகரித்து இருப்பது மற்றும் உடல் பருமன் அதிகரித்து இருப்பது போன்றவை மிகவும் ஆபத்தானவை, எனவே செயற்கை இனிப்புட்டிகளைத் தவிர்ப்பது நல்லது.
உடலுக்குக் குறைவான சத்து உள்ளபோது செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்குப் பதிலாகச் சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றது.

இதைப் பற்றி ஆராய்ந்து பார்த்த போது செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புப் போன்றவையினால் வளர்சிதை மாற்றம், குடல் பாக்டீரியா மற்றும் பசியின்மை ஆகியவற்றில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.
இவ்வாறு, அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை நுகரும் தனிநபர்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதில் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் எனக் கனடாவிலுள்ள மானிடொபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் செயற்கை இனிப்பான்களின் பயன்படுத்துவது தொற்று நோய், உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், சராசரியாக 1,003 நபர்க்கு 6 மாதங்கள் நடத்தப்பட்ட சோதனையை வைத்துக் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியின் போது செயற்கை இனிப்பூட்டிகளால் எடை குறைப்புக்கான எந்த விளைவும் தென்படவில்லை. இதுவே நீண்ட கால ஆய்வாகத் தொடரப்பட்ட போது செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொள்ளும் போது எடை அதிகரிப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் பொன்ற பிற உடல்நலப் பிரச்சனைகள் எழும் என்று தெரியவந்துள்ளது.

"எடை மேலாண்மையினைப் பொறுத்தவரையில் செயற்கை இனிப்புட்டிகளின் நோக்கம் அதன் நன்மைகளைக் கிளினிக்கல் பரிசோதனையில் தெளிவாக இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்றும் அதனால் நீண்ட நாட்கள் ஆய்விற்காக உட்படுத்தினோன் என்று மானிடோபா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான ரியான் ஜார்சான்ஸ்கி தெரிவித்தார்.
செயற்கை இனிப்புட்டிகள் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது எல்லாம் சித்தரிக்கப்பட்டது என்றும் அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான மேகன் ஆசாத் தெரிவித்தார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

