Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன?
நரம்புகளை பலப்படுத்தும் அர்த்த பின்சா மயுராசனா - தினம் ஒரு யோகா
நரம்புகள் நமது உடலில் தலை முதல் கால் வரை மொத்த இயக்கங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறுகின்றன.
நரம்புகளில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவை உடலை பாதிக்கும். நரம்பு மண்டலத்தில் உண்டாகும் பாதிப்பினால், நடுக்கம், பதட்டம், மன நிலை பாதிப்பு, மற்றும் அல்சீமர், பார்கின்ஸன் போன்று நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்களும் உண்டு.

திடீரென நரம்பில் புடைப்பு, வீக்கம், வலி, தூக்கம் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருக்கும்,. உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
நமது உடலில் பல உறுப்புகளை பராமரிக்க தகுந்த உடற்பயிற்சிகள் உள்ளது. ஆனால் நரம்புகளை பலமாக வைத்திருக்க தனியாக உடற்பயிற்சிகள் இல்லை. ஆனால் யோகாவில் ஆசனங்கள் உள்ளன.
அவை நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை தளர்க்கும். நரம்புகளுக்கு போதிய ரத்த ஓட்டத்தை அளித்திடும். நரம்புகளை பலப்படுத்திவிடும்.
அர்த்த பின்சா மயுராசனா :
அர்த்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். பின்சா என்றால் இறக்கை, மயூர் என்றால் மயில். இந்த ஆசனம் நரம்புகளை தூண்டி, நன்றாக செயல்பட வைக்கும். இதனால் எப்போதும் புத்துணர்வாக காண்பீர்கள். சோம்பல் விலகும்.
செய்முறை :
தடாசனாவில் நில்லுங்கள். பின்னர் மெதுவாக முட்டி போட்டு அமர வேண்டும். ஆழ்ந்து மூச்சை விட்டு. மெதுவாக படுப்பது போல் குனிந்து முழங்கைகளை தரையில் ஊன்றுங்கள்.
உள்ளங்கைகளை தரையில் பதிக்க வேண்டும். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். பின் மெதுவாக இடுப்பை உயர்த்துங்கள். முகத்தையும் கழுத்தையும் தொங்க விட வேண்டும். பார்ப்பதற்கு ஒரு மலைப் போல வளைவான தோற்றத்தில் உடல் இருக்க வேண்டும். மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள்.
இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் எழுந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும். பின்னர் திரும்பவும் செய்யலாம். இது போல் மூன்று முறை செய்யலாம்.
பலன்கள் :
தோள்களுக்கு பலம் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆஸ்துமாவை கட்டுபடுத்தும். நரம்புகளுக்கு பலமளிக்கும். தலைவலி, இடுப்புவலியை குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














