Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
நரம்புகளை பலப்படுத்தும் அர்த்த பின்சா மயுராசனா - தினம் ஒரு யோகா
நரம்புகள் நமது உடலில் தலை முதல் கால் வரை மொத்த இயக்கங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறுகின்றன.
நரம்புகளில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவை உடலை பாதிக்கும். நரம்பு மண்டலத்தில் உண்டாகும் பாதிப்பினால், நடுக்கம், பதட்டம், மன நிலை பாதிப்பு, மற்றும் அல்சீமர், பார்கின்ஸன் போன்று நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்களும் உண்டு.

திடீரென நரம்பில் புடைப்பு, வீக்கம், வலி, தூக்கம் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருக்கும்,. உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
நமது உடலில் பல உறுப்புகளை பராமரிக்க தகுந்த உடற்பயிற்சிகள் உள்ளது. ஆனால் நரம்புகளை பலமாக வைத்திருக்க தனியாக உடற்பயிற்சிகள் இல்லை. ஆனால் யோகாவில் ஆசனங்கள் உள்ளன.
அவை நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை தளர்க்கும். நரம்புகளுக்கு போதிய ரத்த ஓட்டத்தை அளித்திடும். நரம்புகளை பலப்படுத்திவிடும்.
அர்த்த பின்சா மயுராசனா :
அர்த்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். பின்சா என்றால் இறக்கை, மயூர் என்றால் மயில். இந்த ஆசனம் நரம்புகளை தூண்டி, நன்றாக செயல்பட வைக்கும். இதனால் எப்போதும் புத்துணர்வாக காண்பீர்கள். சோம்பல் விலகும்.
செய்முறை :
தடாசனாவில் நில்லுங்கள். பின்னர் மெதுவாக முட்டி போட்டு அமர வேண்டும். ஆழ்ந்து மூச்சை விட்டு. மெதுவாக படுப்பது போல் குனிந்து முழங்கைகளை தரையில் ஊன்றுங்கள்.
உள்ளங்கைகளை தரையில் பதிக்க வேண்டும். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். பின் மெதுவாக இடுப்பை உயர்த்துங்கள். முகத்தையும் கழுத்தையும் தொங்க விட வேண்டும். பார்ப்பதற்கு ஒரு மலைப் போல வளைவான தோற்றத்தில் உடல் இருக்க வேண்டும். மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள்.
இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் எழுந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும். பின்னர் திரும்பவும் செய்யலாம். இது போல் மூன்று முறை செய்யலாம்.
பலன்கள் :
தோள்களுக்கு பலம் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆஸ்துமாவை கட்டுபடுத்தும். நரம்புகளுக்கு பலமளிக்கும். தலைவலி, இடுப்புவலியை குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


