Latest Updates
-
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம் -
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா?
செயற்கை இமைகள் கண்களில் அதிக நேரம் வைப்பதால் வரும் விளைவுகள்!!
செய்ற்கை இமைகளை பயன்படுத்துவது நன்மையளிக்குமா? என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அதுவும் நீளமான கண் ரப்பைகள்(கண் இமை முடிகள்) பார்ப்பவரை மயக்க கூடியதாக இருக்கும். இயற்கையிலேயே சிலருக்கு நீண்ட கண் ரப்பைகள் இருக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பியூட்டி பார்லர் . ஒரு செயற்கை பசை கொண்டு கண்களின் ரப்பைகளை நீளமாக்குவார்கள்.

இந்த செயற்கை கண் ரப்பைகளை நீண்ட நேரம் கண்களில் வைத்திருக்க கூடாது. அடிக்கடி பயன்படுத்தவும் கூடாது. இவை கண்களை பாதிக்கும் என்று ஒப்பனை நிபுணர் நந்திதா டாஸ் கூறுகிறார்.
செயற்கை கண் ரப்பைகள் கரு விழியில் மற்றும் கண் இமைகளில் தொற்றுகளை ஏற்படுத்தலாம். கண்களை சிரமத்திற்கு உள்ளாக்கலாம்.
அழகியல் நிபுணரால் செயற்கை ரப்பையை உருவாக்க பயன்படுத்த கூடிய பசை, ஒவ்வாமையை உண்டாக்கலாம். பார்மல்டீஹைடு என்ற ஒரு இரசாயனம் கலக்காத பசையா என்பதை உறுதி செய்து விட்டு பயன்படுத்தலாம். இந்த ரசாயன பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை எரிச்சல் , வீக்கம் போன்ற விதத்தில் வெளிப்பட்டு கட்டிகள் உண்டாகலாம்.
தொற்றுகளும் ஒவ்வாமைகளும் ஒரு புறம் இருக்க , நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரப்பைகள் உதிர தொடங்கும். ரப்பைகளை நீளமாக்க பயன்படுத்தப்படும் பசையால், இயற்கையான ரப்பையின் வேர்க்கால்கள் பலவீனமாகி பாரம் தாங்காமல் உடைய நேரிடும்.
ஆகவே செயற்கை ரப்பைகளை பயன்படுத்துவதற்கு முன் நிறைய யோசித்து பிறகு பயன்படுத்துங்கள். ஒரு முறை ரப்பைகளை இழக்க நேரிட்டால் பின்பு அவை வளர்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
கண்களில் செயற்கை ரப்பைகளை பொருத்தியவுடன் எரிச்சல் , வலி அல்லது கண்களில் சிவப்பு நிறம் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனியுங்கள். அப்படி தெரிந்தால் உடனடியாக செயற்கை ரப்பைகளை நீக்கி விடுங்கள் . அப்படியே விட்டால், நிலைமை மோசமாகி விடும்.
முடிந்த வரை இந்த செயற்கை ரப்பைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி பயன்படுத்தும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதனை விட சிறந்த தீர்வு, உங்கள் இயற்கையான கண் ரப்பைகளை நீளமாக வளர வைப்பது. இதற்கு தினமும் ரப்பைகளில் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி ரப்பைகளை வளர செய்யலாம்.



Click it and Unblock the Notifications

