Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
முகத்தில் பருக்கள் அளவுக்கு அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கைப் போடுங்க...
இங்கு முகப்பருக்களைப் போக்கும் அற்புதமான கற்பூர எண்ணெய் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், ஆண்கள் என இருபாலரும் அதிகம் அவஸ்தைப்படும் ஓர் பொதுவான சரும பிரச்சனை தான் முகப்பரு. முகத்தில் ஒன்று இரண்டு பருக்கள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலருக்கு கன்னப் பகுதி முழுவதுமே பருக்களாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் அழகை நினைத்து அதிகம் கவலைக் கொள்வார்கள்.

மேலும் இந்த பருக்களைப் போக்க கண்ட க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பருக்கள் முதல் கருவளையங்கள் வரை, முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.
சரி, இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3 ஸ்பூன்
கிளிசரின் - 2 ஸ்பூன்
கற்பூர எண்ணெய் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் அத்துடன் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான என்றால் இன்னும் சில துளிகள் கிளிசரினை சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை #3
பின்பு அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
அடுத்ததாக ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் மாஸ்க் தயார்.

பயன்படுத்தும் முறை:
தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications