Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
முகத்தில் பருக்கள் அளவுக்கு அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கைப் போடுங்க...
இங்கு முகப்பருக்களைப் போக்கும் அற்புதமான கற்பூர எண்ணெய் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், ஆண்கள் என இருபாலரும் அதிகம் அவஸ்தைப்படும் ஓர் பொதுவான சரும பிரச்சனை தான் முகப்பரு. முகத்தில் ஒன்று இரண்டு பருக்கள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலருக்கு கன்னப் பகுதி முழுவதுமே பருக்களாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் அழகை நினைத்து அதிகம் கவலைக் கொள்வார்கள்.

மேலும் இந்த பருக்களைப் போக்க கண்ட க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பருக்கள் முதல் கருவளையங்கள் வரை, முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.
சரி, இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3 ஸ்பூன்
கிளிசரின் - 2 ஸ்பூன்
கற்பூர எண்ணெய் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் அத்துடன் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான என்றால் இன்னும் சில துளிகள் கிளிசரினை சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை #3
பின்பு அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
அடுத்ததாக ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் மாஸ்க் தயார்.

பயன்படுத்தும் முறை:
தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications