Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!
முகத்தில் உடனடியாக அழகையும் பொலிவையும் தர கடைகளில் விற்கும் அழகு சாதனங்கள் பல பல ரசாயானங்களை சேர்த்திருப்பர். ஆகவே இயற்கைமுறையில் விரைவில் பொலிவை பெற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
எல்லா சமயத்திலும் நாம் புத்துணர்ச்சியோடு இருக்க முடியாது. அதுவும் ஏதாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் முகம் டல்லா இருக்கும்.
திடீரென பார்லருக்கும் செல்ல முடியாது. அதே சமயம் முகமும் பொலிவா இருக்கனும் என்ன செய்யலாம்.

உடனடியாக உங்கள் சருமத்திற்கு மெருகை தரும் பல இயற்கை அழகு பொருட்கள் இருக்கின்றன. அவற்றை எப்படி உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

எண்ணெய் மற்றும் முகப்பரு இருப்பவர்கள் :
எண்ணெய் சருமம், முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு முகம் பளிச்சென்று இருப்பது கஷ்டம். அவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகம் கழுவினால் , அதிகப்படியான எண்ணெய் மற்றும் முகப்பருக்களின் தீவிரம் குறைந்து முகம் பளபளக்கும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் :
வறண்ட சருமம் இருப்பவர்கள் , லிப் பாம் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை கன்னத்தில் மேல் நோக்கி தேய்த்தால் கன்னம் பார்ப்பதற்கு பளபளக்கும். சிவப்பாக மாறும்.

கண்களுக்கு அடியில் சதைப்பை :
கண்களுக்கு அடியில் சதைப்பை இருந்தாம் கண்கள் வீங்கி வயதான தோற்றத்தை தரும். இதனை தவிர்க்க விச் ஹாஜல் என்ற திரவம் அழகு சாதன கடையில் கிடைக்கும்.
அதனை வாங்கி எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு பஞ்சினால் எடுத்து கண்களை சுற்றிலும் வைத்தால் கண்களுக்கு அடியிலிருக்கும் நீர் வற்றி கண்கள் இளமையாக காண்பிக்கும்

மேக்கப் க்ரீமை எப்படி பயன்படுத்துவது :
பழைய முறையில் ஃபவுண்டேஷனை உபயோகிக்காதீர்கள். சிறிது ஃபவுண்டேஷனை எடுத்து அதில் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டு விட்டு முகத்தில் போடுங்கள். மேக்கப் போட்டது போல் தெரியாது. இயற்கையான பொலிவு கிடைக்கும்.

உருளைக் கிழங்கு சாறு :
இதுவும் உடனடியாக பொலிவை தரக் கூடியது. உருளைக் கிழங்கில் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications