Just In
- 5 hrs ago
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
- 5 hrs ago
முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய உலகை வடிவமைத்த வரலாற்றில் வாழும் உண்மையான சிங்கப்பெண்கள்... சிலிர்க்க வைக்கும் வரலாறு...!
- 6 hrs ago
90% இந்திய பெண்கள் அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!
Don't Miss
- News
மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன?
- Movies
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா ?
- Automobiles
மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?
- Sports
ஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ் ஏற்படுத்திய டிவிஸ்ட்!
- Finance
5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஆபத்தான ஒரு மாமியாரிடம் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்...!
ஒரு பெண்ணின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய கணவர் மட்டுமல்ல மாமியாரும் சரியாக அமைய வேண்டும். வெறித்தனமான மற்றும் எரிச்சலூட்டும் மாமியாருடன் வாழ்வது எந்த பெண்ணுக்கும் சிரமமான ஒன்றுதான் அதனை யாரும் விரும்புவதில்லை. மோசமான மாமியாருடன் இருக்கும்போது பெண்கள் தங்களின் ஆற்றல் அனைத்தையும் இழக்கிறார்கள். அவருடன் இருக்கும்போது தாங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் கூடுதல் கவனத்துடன் இருக்க பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஒரு மோசமான மாமியார் மருமகள் செய்யும் அனைத்து காரியங்களிலும் குற்றம் கண்டுபிடித்து சண்டையைத் தொடங்குவார். அத்தகைய மாமியாரைக் கையாள்வது என்பது மிகவும் கடினமாகும். சிலசமயங்களில் எதற்காக அவர்கள் சண்டையைத் தொடங்குகிறார்கள் என்பதே குழப்பமாக இருக்கும். இந்தவகை மாமியார்கள் மிகவும் ஆபத்தானவர்கள். குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் மாமியாரும் இந்த வகையை சார்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது. அது என்னென்ன அறிகுறிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைத்திலும் தலையிடுவது மற்றும் விசாரிப்பது
மோசமான மாமியார் எப்போதுமே ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, அது அவர்களுக்கு தேவை இல்லாத விஷயம் இல்லை என்றாலும். அவர்கள் திடீரென்று உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்பதைக் காண்பீர்கள், பின்னர் உங்களை பெரும்பாலும் புண்படுத்தும் கருத்துக்களைக் கூறுவார்கள். அவர்கள் எவ்வளவு தனிப்பட்டவர்களாக இருந்தாலும், உங்கள் உரையாடல்களைக் கேட்க முனைவார்கள்.

எல்லையின்றி நடந்து கொள்வது
உங்களுக்கும் முழு குடும்பத்துக்கும் தேவையில்லாதபோது கூட முடிவுகளை எடுக்க அவர் விரும்புவார். நீங்கள் இருவரும் ஒரு மாலை நேரத்தில் வெளியே இருக்கும்போது கூட, இந்த மாமியார் உங்கள் மற்றும் உங்கள் கணவருக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் குண்டு வீசலாம். உங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஒருபடி மேலே சென்று உங்கள் குழந்தைகளுக்கான முடிவுகளை எடுக்கக்கூடும்.
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?

அனைத்தையும் விமர்சிப்பது
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர் விமர்சிப்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் ஜட்ஜ் பண்ணுவார்கள். உங்களுடன் ஒருபோதும் அவர்கள் இனிமையான நேரத்தை கழிக்க மாட்டார்கள். உங்களின் சமையல், உங்களின் ஆடை, உங்களின் நிர்வகிக்கும் திறன் என அனைத்திலும் அவர்கள் புகார் செய்வார்கள். உங்களை ஒவ்வொரு முறையும் குறை சொல்லும்போதும் அவரின் முகத்தில் ஒரு திருப்திகரமான புன்னகையை நீங்கள் பார்க்கலாம்.

கடந்த காலத்தைப் பற்றியே பேசுவது
நீங்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அல்லது கசப்பான கடந்த கால நிகழ்வுகளை மறக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு முறையும் கடந்த கால சம்பவங்களை கொண்டு வர உங்கள் மாமியார் முயற்சிப்பார். உங்களை அசௌகரியமான சூழலில் பார்க்கும்போது அவர் முழு மகிழ்ச்சியையும் திருப்தியையும் உணர்கிறார். உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் விஷயங்களை மன்னிப்பதற்கும் அவரால் இயலாது. நீங்கள் எப்போதாவது அவரின் முடிவுக்கு எதிராக செல்ல முயற்சித்தால், அவர் அந்த நேரத்தின் கோபத்தை இறுதி வரை அப்படியே வைத்திருப்பார்.
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!

உங்கள் விருப்பங்களை மதிக்காமல் இருப்பது
உங்களை பற்றிய ஒரு எண்ணத்தையும், மதிப்பீட்டையும் உண்டாக்கியிருந்தால், தங்களுடைய எண்ணத்தில் இருந்து ஒருபோதும் அவர் மாறமாட்டார். தன்னுடைய கருத்துகள் மற்றும் முடிவுகளை மட்டுமே அவர் நம்புவார், உங்கள் விருப்பங்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டார். உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் தாழ்த்துவதற்கு அவர் ஒருபோதும் தயங்கவோ, யோசிக்கவோ மாட்டார்.