Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கணவன் வேறொரு பெண் மீது அதீத ஆசைக் கொள்ள காரணமான 7 விஷயங்கள்!
இங்கு கணவன் வேறொரு பெண் மீது அதீத ஆசைக் கொள்ள காரணமான 7 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது
பொதுவாகவே திருமணத்திற்கு பிறகும் கூட ஆண்களுக்கு வேறு பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். ஆனால், அந்த ஈர்ப்பு வெறும் பார்வையுடன் நிறுத்திக் கொள்கின்றனரா? இல்லை, எல்லை தாண்டி சென்றுவிடுவார்களா? என்பது தான் பெரிய கேள்வி.

பெரும்பாலும் பார்வையுடன் நிறுத்திக் கொள்ளும் ஈர்ப்பாக தான் அமையும் எனிலும். தன் மனைவியை தாண்டி வேறு பெண் மீது ஒரு கணவன் அதிக ஈர்ப்பு கொல்வதற்கு சில காரணங்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

காரணம் #1
மனைவியை எப்போதும் வேறு பெண்களுடன் ஒப்பிடும், கணவன்மார்கள், எளிதாக, வேறு பெண்கள் மீது அதீத ஈர்ப்பு கொண்டுவிடுகிறார்கள்.

காரணம் #2
மனைவிக்கு ஆடை உடுத்துவதில் நளினம் அல்லது ஆடை உடுத்தும் விதம் பிடிக்கவில்லை எனில், வேறு பெண்கள் மீது அல்லது நன்கு ஆடை உடுத்தும் பெண்கள் மீது ஆசை அதிகரித்துவிடுகிறது.

காரணம் #3
ஆபாசப் படங்கள் அதிகம் பார்க்கும் கணவன்மார்களுக்கு மற்ற பெண்கள் மீது அதிகம் ஆசை ஏற்படுகிறது என பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள தகவலாகும். இது பல வகையில் இல்லறத்தை சீர்குலைந்து போக செய்கிறது.

காரணம் #4
கடந்து செல்லும் பெண்களை பார்ப்பதில் தவறில்லை. ஆனால், கடந்து சென்ற பின்னும் உற்று நோக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஆசை கொள்கின்றனர்.

காரணம் #5
ஒவ்வொரு முறையும் வாக்குவாதம் ஏற்படும் போதும், நீ என்னை கட்டுப்படுத்த முடியாது, நீ யார் என்னை கட்டுப்படுத்த என கூறும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதீத ஆசை கொள்கின்றனர்.

காரணம் #6
ஃபேஸ்புக்கில் பெண் முகவரிகள் அனைத்திற்கும் பிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் கொடுத்து, அதிக பெண் தோழிகள் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஆசை கொள்வார்கள்.

காரணம் #7
எதிர்பாலின நட்புகளுடன் மட்டும் அதிக நெருக்கத்துடன் பழகும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஈர்ப்பும், அசையும் கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications











