Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மேற்கத்திய காலச்சரங்கள் நம்மில் கலந்தது தான் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணமா?
இந்த பகுதியில் விவாகரத்து ஏற்பட காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமானது. நம் வாழ்வின் கடைசி நாட்கள் வரை நம்முடன் வரக்கூடிய ஒரு உறவு. இந்த உறவில் விட்டுக்கொடுத்து போவது மற்றும் சில விஷயங்களை அனுசரித்து போவது முக்கியம். நம் அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு இருந்த பொருமையும், விட்டுக்கொடுத்து போகும் குணமும் நம்மிடம் உள்ளதா? கண்டிப்பாக இல்லை. நமது எண்ணங்களுக்குள் மேற்கத்திய நாகரிகம் பரவி வருவது இது திருமணங்கள் தோல்வியில் முடிய காரணமாக இருக்கிறது.

மேற்கத்திய தாக்கங்கள்
இன்றைய சில பெண்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் முன்னரே தனது சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும், சுதந்திரம் பறிபோகக்கூடாது என்பது தான் பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆண்களும் அவ்வாறே இருக்கின்றனர். யாராக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் சில மாற்றங்களை செய்து கொண்டால் தான் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்ற நிலை மாறி விட்டது. இன்று எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது பாரம்பரியம்
மேலை நாடுகள் எல்லாம் நமது பாரம்பரியத்தை கண்டு திகைப்பில் இருக்கும் போது நமது எண்ணகளோ மேலைநாடுகளின் பாரம்பரியத்தின் பக்கம் சாய்கிறது. சகிப்பது தன்மை ஆண் பெண் என இருபாலரிடமும் குறைந்து தான் காணப்படுகிறது.

சகிப்பு தன்மை
இன்றைய தலைமுறையினரிடம் வேகம் மட்டுமே உள்ளதே தவிர உறவில் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுத்து போவதும் அதிகம் காணப்படுவது இல்லை. மேலைநாடுகள் எல்லாம் அப்படி இருக்கின்றன. எனவே நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

கூட்டுக் குடும்பங்கள்
கூட்டுக் குடும்ப வாழ்க்கை தம்பதிகளிடையே உண்டாகும் பல பிரச்சனைகளை குறைப்பதாக இருக்கிறது. இந்த வாழ்க்கையில் தம்பதிகளுக்கிடையே ஏதேனும் சண்டைகள் வந்தால் கூட அதனை தடுக்கவும் அறிவுரைகள் சொல்லவும் பெற்றோர்கள் இருந்தார்கள். தனிக்குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளை பெரிதுபடுத்துகிறது.

மாற்றங்கள்
இன்று நாம் நிதி நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை தான் அதிகம் விரும்புகின்றோம். உறவுகளுக்கு தரும் மதிப்புகள் குறைந்துவிட்டது. பிற விஷயங்களை காட்டிலும் தம்பதிகள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது வேண்டும்.
இன்று நாம் நிதி நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை தான் அதிகம் விரும்புகின்றோம். உறவுகளுக்கு தரும் மதிப்புகள் குறைந்துவிட்டது. பிற விஷயங்களை காட்டிலும் தம்பதிகள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது வேண்டும்.

அதிகரித்து வரும் விவாகரத்து
இன்னும் இந்தியாவில் விவாகரத்துகளின் அளவு குறைந்ததாக தெரியவில்லை. அதிக அளவு விவாகரத்துகள் வர சகிப்பு தன்மை இன்மை, விட்டுக்கொடுத்து போகும் தன்மை இல்லாதது ஆகியவை காரணமாக இருக்கின்றன.



Click it and Unblock the Notifications











