Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திய தம்பதிகளிடம் உண்டாகும் வீண் சண்டைகள்!
பெரும்பாலும் காரணத்துடன் இந்திய தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்வது 0.9% தான். மற்றவை 99.1% சதவீத சண்டைக்கு இவர்களே காரணமாக இருக்க மாட்டார்கள். எங்கோ, எதையோ பேச ஆரம்பித்து கடைசியில் பேச்சு எங்கோ முடிந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.
இதற்கான முக்கிய காரணம் கண்டிப்பாக உறவினர்களாக தான் இருப்பார்கள். பெரும்பாலும் இந்த சண்டைகள் தம்பதிகளை பாதிக்கிறதோ இல்லையோ, அவர்களது குழந்தைகளை மனதளவில் வெகுவாக பாதிக்கிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தை வளர்ப்பில்
பெரும்பாலான வீட்டில் குழந்தைகளின் சிறு தவறு, பெற்றோர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட காரணமாகிவிடும். பொதுவாகவே, குழந்தை எதாவது தவறு செய்தால் அப்பன மாதிரி, ஆத்தாள மாதிரி என ஆரம்பிக்கும் வாக்கியங்கள், வாக்குவாதத்தில் தான் சென்று முடிகின்றன.
பிறந்த வீடு, புகுந்த வீடு
எங்க வீட்டு ஆளுங்க எல்லா அப்படி நடந்துக்க மாட்டாங்க.. ஆனா, உங்க வீட்டு ஆளுங்கள பாரு... என பிறந்த வீடு, புகந்த வீடு உறவுகளை ஒப்பிட்டு பேசி சண்டையிட்டு கொள்வார்கள். பெரும்பாலும், சுப நிகழ்வுகள் நடந்த மறுநாளில் இந்த சண்டைகள் தலைக் தூக்குகின்றன.
உப்பு சப்பு
இத்தன வருசமா சமைக்கிற உப்பு, காரம் கூட ஒழுங்கா போட தெரியாதா? என கொஞ்சம் குரலை உயர்த்தினாலும், சமையலறையில் பாத்திரங்கள் உருள ஆரம்பித்துவிடும்.
ஒப்பீடு
இந்திய கணவர்களுக்கு ஒப்பிட்டு பேசுவது பிடிகாதும், இந்திய மனைவிகளால் ஒப்பிட்டு பேசாமல் இருக்க முடியாது. அப்பறம் என்ன.. சண்டை தான்.
இருப்பதை விட்டு பறப்பது
பெரும்பாலும் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படும் போது தான் தம்பதி மத்தியில் சண்டை பிறக்கிறது. பேராசை பெரும் நஷ்டம் என்பது வெறும் பழமொழி இல்லை.
பாதிப்புகள்
வீட்டில் கணவன், மனைவி அவசயமின்றி அளவுக்கு அதிகமான சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டையிட்டு கொள்வது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கிறது. இதில் முக்கியமாக தம்பதிகள் செய்யும் தவறே, இவர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொண்டு, அவர்கள் இல்லாத போது சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.