Just In
- 1 hr ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 2 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 3 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்மித்ரா திட்டம்..!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இப்படி ஒரு மனைவி இருந்தால், யார் தான் வேண்டாம் என்பார்கள்!!!
பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும்.
ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம், இவர்களது பிடிவாதம் பொருட்கள் வாங்குவதில் மட்டும் இருக்காது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதிலும் இருக்கும்.
இதையும் படிங்க: திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்!
கணவன் சோர்வடையும் போது தேற்றிவிடுவதில் இருந்து, ஊக்கமளிப்பது, உதவுவது, தன்னம்பிக்கை அளிப்பது என ஓர் நல்ல இல்லத்தரசியாக திகழ தேவைப்படும் அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத குணம் உடைய பெண்களிடம் இருக்கும்.
காரணம் #1
தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் பிடிவாத குணமுடைய பெண்கள் சரியாக இருப்பார்கள். வேண்டாதவை மீது ஆசைப்பட மாட்டார்கள், வேண்டுவதை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள்.
மேலும், இவர்கள் ஒரு விஷயத்தின் மேல் வைக்கும் காதல் மிக நேர்மையாகவும், தீர்க்கமாகவும் இருக்கும்.
காரணம் #2
பிடிவாத குணமுடைய பெண்கள் உணர்வு ரீதியானவர்கள். அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் என எதுவாக இருப்பினும் முழுமனதுடன் வெளிப்படுத்தும் குணம் இவர்களிடம் இருக்கும்.
காரணம் #3
ஊக்கம்! நீங்களே சோர்வுற்றாலும், இவர்கள் ஊக்கமளித்து உங்களை முன்னேறி செல்ல அழுத்தம் தந்து முன்னேற உதவுவார்கள். பிடிவாதம் என்பதை தாண்டி ஓர் செயலில், சொல்லில் நிலையாக இருக்கும் பண்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
காரணம் #4
உண்மையான பேச்சு! உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமால். நேர்மையாக, முகத்திற்கு நேராக பளிச்சென்று பேசிவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால், சண்டைகள் எழலாம், ஆனால், அது உடனடி தீர்வுடன் சுபமாக முடிந்துவிடும். கோவில் மணியோசை போல எதிரொலித்து கொண்டே இருக்காது.
காரணம் #5
சுவாரஸ்யமானவர்க்கள்! பிடிவாத குணம் இருப்பினும் கூட, சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள், கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும் இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாக இருக்கும்.
காரணம் #6
பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்தும் கொள்வார்கள், குறித்தும் கொள்வார்கள்.
காரணம் #7
தன்னம்பிக்கை! ஒரு விஷயத்தில் நிலைபெற்று அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் இவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால், இவர்கள் உங்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்துக் கொள்வார்கள்.
காரணம் #8
ஆர்வம்! நினைத்ததை அடையவேண்டும் என்ற இவர்ளது பேரார்வம் வேலை, மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும். இதனால், எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்துக் கொள்வார்கள்.