Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் டேட்டிங் செல்கிறீர்களா? இந்த கஃபேக்களில் நடக்கும் 'ஹனி டிராப்' மோசடியில் சிக்காமல் இருக்க இதை உடனே தெரிஞ்சுக்கோங்க! -
இந்த 4 ராசிக்காரங்க பேசுவதில் ரொம்ப பலவீனமானவர்களாம் - இவங்களுக்கு பிரச்சினையே இவங்க வாய்தான் -
முகம் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப வெறும் 2 பொருட்களை கொண்ட 'இந்த ஃபேஸ் பேக்' போடுங்க.. -
கத்திரிக்காய் வாங்குனா இப்படி சூப்பரா பிரியாணி செஞ்சு பாருங்க - டெஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மே 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் அதிகரிக்கப்போகுது! -
இட்லி உருவான வரலாறு என்ன? இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும் -
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்!
ஐம்பதுகளில் வரும் காதலின் உன்னதம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது!!
உங்கள் திருமணத்தில் ஆரம்பித்து, உங்கள் குழந்தைகளின் திருமணத்தில் முடிவடைகிறது, நீங்கள் மற்றவருக்காக வாழும் வாழ்க்கை. எப்படியும் இந்த பொறுப்பை எல்லாம் முடிப்பதற்கு ஐம்பது, அறுவது வயது முடிந்துவிடும். ஐம்பதுகளில் தான் ஒரு தம்பதியின் உண்மையான காதல் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
உடல் உறவுகள் இன்றி, மனதின் இணைப்பு மட்டுமே வலுவாய் இருக்கும் தருணம் அது. முழுக்க, முழுக்க ஒருவருக்கு ஒருவர் என்பதை நீங்கள் உணர்ந்து வாழும் நேரமும் இது தான். ஐம்பதிகளில் வரும் காதல் முற்றிலும் வேறுப்பட்ட ஒன்று. சகிப்புத்தன்மையும், வாழ்க்கையின் முதிர்ச்சியும், முழு அறிதலும் இருக்கும்.
நீங்களே கண்டிருக்கலாம், எந்த வகையான குழப்பமாக இருந்தாலும் அதற்கான தீர்வு, ஐம்பதுகளில் வாழும் தம்பதியிடம் இருக்கும்.....

நினைவுகளின் பெட்டகம்
திருமணம் பந்தம் ஆரம்பித்த நாளில் இருந்து, ஏறத்தாழ 20 - 25 ஆண்டுகள் நீங்கள் கடந்த வந்த பெரும் பயணத்தை பற்றி பேசவே உங்களுக்கு ஓர் ஐம்பது வருடங்கள் தேவைப்படும். சண்டைகள் போட்டு, அழுத பொழுதுகள் கூட உங்களை சிரிக்க வைக்கும்.

உறுதியான துணை
கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், உண்மையில் ஐம்பதுகளில் தான் நீங்கள் உறுதியான துணையாய் அறிவீர்கள். முழுக்க, முழுக்க உங்களுக்கு அவர், அவருக்கு நீங்கள் என்று நீங்கள் வாழும் நாட்கள் அவை.

பேரன், பேத்தி
சிலர் பேரன் பேத்தி எடுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள், சிலர் பேரன், பேதியை எதிர்பார்த்து இருப்பர்கள். குழந்தையை வளர்ப்பதோடு, பேரனை வளர்ப்பதில் இருக்கும் அந்த இன்பமும், மகிழ்ச்சியும் கடலை விடவும் பெரியது.

உண்மையான ஓய்வு
ஐந்து நாட்கள் வேலை போக வார இறுதியில் நீங்கள் இரண்டு நாட்கள் வெட்டியாய் பொழுதை கழிப்பது அல்ல ஓய்வு. அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு ஐம்பது, அறுவதுகளில் நீங்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கும் அந்த நேரம் தான் உண்மையான் ஓய்வு.

பொன்னான நேரம்
இந்த காலத்தில் ஐம்பது, அறுவதுகள் நோய்களுக்கான வயதாகிவிட்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த வகையில் நோயற்ற ஐம்பது, அறுவதுகள் தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான பொன்னான நேரம்.



Click it and Unblock the Notifications