Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
உடலுறவில் ஈடுபட்ட 45 நிமிடத்தில் சிறுநீர் கழித்துவிட வேண்டும், ஏன் தெரியுமா?
பலரும் இதை அறிவதில்லை. ஆனால், ஆரோக்கியமான தாம்பத்திற்கு இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு 45 நிமிடத்திற்குள் சிறுநீர் கழித்துவிட வேண்டுமாம். முக்கியமாக பெண்கள்.
உடலுறவில் ஈடுபடும் முன்னர் மட்டுமில்லாது பின்னரும் கூட சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக தாம்பத்திய உறவிற்கு பிறகு சிறுநீர் கழிக்காமல் இருப்பது பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட காரணியாக இருக்கிறது.

தொற்று
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க தவறுவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், இது எதிர்கால உடலுறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொற்று ஏற்படுவதால் பெண்களுக்கு உறவில் ஈடுபடும் போது வலி மிகுதியாக உணரலாம்.

பாக்டீரியா
உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் வடிகுழாய்யில் பாக்டீரியாக்கள் தேங்கியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதை வெளியேற்ற தான் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

நுண்ணுயிர்கள்
மேலும், பிறப்புறுப்பு மற்றும் மலக்குடல் பகுதி, அதை சுற்றியிருக்கும் பகுதியில் சில நுண்ணியிர்கள், பாக்டீரியாக்கள் தேங்கும். இவை சிறுநீர் வடிகுழாய் பகுதியில் ஊடுருவும். இதனால், சிறுநீர் குழாயில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் மத்தியில் தான் இந்த அபாயம் அதிகம்.

சிறுநீர் வடிகுழாய்
மேலும், பெண்கள் மத்தியில் வெளிப்படும் தூண்டல் (Ejaculation) சிறுநீர் வடிகுழாய் மூலமாக ஏற்படுவதில்லை. எனவே, உடலுறவில் ஈடுபட்ட போது தேங்குபவற்றை சிறுநீர் கழித்தல் மூலமாக தான் வெளியேற்ற முடியும். அதிலும், உறவில் ஈடுபட்ட 45 நிமிடங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம் மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

ஆணுறை
ஆணுறை பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் கூட இது போன்ற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும்.

சுகாதாரம்
மேலும், இது போன்ற தொற்று ஏற்படாமல் இருக்கு உடலுறவில் ஈடுபடும் முன்னர், மற்றும் பின்னர் சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நீர் ஊற்றியாவது பிறப்புறுப்பை கழுவிய பிறகு உறவில் ஈடுபடுங்கள் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











