Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புது காதலர்கள் மத்தியில் வெளிப்படும் விசித்திரமான உணர்வுகள்!
காதல் என்பது பார்த்திபனின் கவிதையை போல, கமல்ஹாசனின் இயக்கத்தை போல அதன் உண்மை ரூபத்தை புரிந்துக் கொள்ள ஓர் தனி முதிர்ச்சி வேண்டும். இங்கு பலருக்கு அது இல்லை என்பது தான் நிதர்சனம். பார்த்ததுமே காதல் தவறில்லை. ஆனால், முட்டாள் தனமாக நடந்துக் கொள்வது தான் தவறு.
தவறியும் காதலில் இந்த 6 தவறுகளை செய்துவிட வேண்டாம்...
நீதான் என் உலகம், நீதான் என் வாழ்க்கை என புலம்புவோர் ஒருபுறம். உடல் தழுவினால் போதும், விரல் உரசினால் போதும் என சில்மிசம் செய்வோர் ஒருபுறம். இவர்கள் இருவருக்கும் நடுவே சிக்கிக்கொண்டு காதல் நசுங்கிய நிலையில் தான் இருக்கிறது.
மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல - எப்படி தெரியுமா?
இனி, புதிதாக உறவில் இணைவோரிடம் தென்படும் சில விசித்திரமான உணர்வுகள் பற்றிக் காண்போம்...
எங்கிருந்து வந்தாய்?
இவளோ நாள் நீ எங்க இருந்த.. ச்சே.. நான் உன்ன இவளோ நாள் எப்படி பாக்காம இருந்தேன். என் லைஃப-லயே நான் பாத்த பர்ஃப்பெக்ட் பொண்ணு / ஆண் நீதான்.
உனக்குமா?
அட.. உனக்கும் ஏ.ஆர். ரகுமான் மியூசிக் பிடிக்குமா.... எனக்கும் பிடிக்கும்மா... ச்சே.. என்ன ஒரு கோ-இன்சிடெண்ட் பாத்தியா.. (மக்களே திருந்துங்க மக்களே... தமிழ்நாட்டுல எல்லாருக்குமே ஏ.ஆர். ரகுமான் மியூசிக் பிடிக்கும் மக்களே)
உன் நியாபகம்
நான் எந்த பாட்டு கேட்டாலும், எந்த ஹீரோயின பாத்தாலும் உன் நியாபகமாவே இருக்கு.. இதுக்கு அவங்க ரியாக்ஷன்: நிஜமாதான் சொல்றியா???
இணையத்தில் ஊடுருவுதல்
தங்கள் பெயர் தன் துணையின் பெயரை கூகிள் செய்து அர்த்தம் பார்ப்பது. ஃப்ளேம்ஸ் போடுவது, லவ் கால்குலேட்டர் என அனைத்திலும் எவ்வளவு சதவீதம் காதல் வருகிறது என தேடி பார்ப்பது. (அப்ப உங்க மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா...)
கிறுக்கு புடிச்சுருச்சு
ஆவூன்னா... எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. உன்ன பாக்காம, பேசாம இருக்க முடியில என கூறுவது.
கொக்காமக்கா லவ்வு
எனக்கு பிடிக்காத விஷயம் கூட நீ பண்ணும் போது ரொம்ப புடிச்சுருக்கு... ஐ தின்க்.. திஸ் இஸ் ட்ரூ லவ்.... வி மேட் ஃபார் ஈச் அதர்.
வாழ்நாள் முழுக்க...
காதலிக்க துவங்கிய ஓரிரு நாட்களிலேயே... வாழ்நாள் முழுக்க நாம் இதே போல சந்தோசமாக இருப்போம்-ல என கேட்பது. (ரெண்டு மாசம் கழிச்சு இத நெனச்சு அவங்களே சிரிச்சுப்பாங்க....)
பிரிந்துவிட்டால் ???
ஒருவேள அப்படி ஆயிட்டா.. ஒருவேள இப்படி நடந்துட்டா.. நாம பிரிஞ்சுட்டா.... என பல நொன்னை கேள்விகளை நினைத்து வருந்துவார்கள்.
பதட்டம்
ஒரு மெசேஜ், ஒரு கால் வரவில்லை எனில்.. என்ன ஆனதோ... ஏது ஆனதோ என பதறுவார்கள். சற்று யோசித்து பார்த்தால் என்ன நடந்திருக்கும் என அறிந்துக் கொள்ளலாம். ஆனால், யோசிக்காமல் தான் பெரும்பாலும் செயல்படுவார்கள்.
என்னவா இருந்திருப்ப?
ஒருவேள நான் உன் லைஃப்ல வராம இருந்திருந்தா நீ எப்படி இருந்திருப்ப? (நிம்மதியா இருந்திருப்பேன்... பின்ன ஜனாதிபதியாவா இருந்திருக்க போறோம். அதே குட்டி சுவர் வெட்டி பேச்சு தான்.. வேற என்ன.)
குழந்தக் குட்டி...
நீ இல்லாம ஒரு வாழ்க்கய யோசிக்கவே முடியாது. (கற்பனை உலகில்) இப்பவே நமக்கு ரெண்டு குழந்தைங்க தெரியுமா? (போதும்டா சாமி ரீலு அறுந்து போச்சு, முடியல)