Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஆண்கள் பெண்களிடம் இரகசியமாக கேட்க நினைக்கும் 12 கேள்விகள்!
என்ன தான் உருகி உருகி காதலித்தாலும், தாலி கட்டும் வரை சில கேள்விகளை கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. மேலும், சில கேள்விகளை கேட்டுவிட்டால் இந்த சமூகமே ஆண்களை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்துவிடும்.
உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்!
எ.கா., மாதவிடாய் குறித்த கேள்விகள் கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. ஒருவேளை அதற்கான தீர்வுகளை ஆண்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நமது ஊர்களில் மாதவிடாய் என்பது ஆண்கள் வாயில் உச்சரிக்கக் கூடாத வார்த்தையாக கருதப்படுகிறது.
உடலுறவில் ஈடுபடும் போது நீங்கள் செய்யும் 5 மிகப்பெரிய தவறுகள்!!!
இது போல பல கேள்விகளை பெண்களிடம் எப்படி கேட்கலாம், எப்போது கேட்கலாம் என ஆண்கள் தயங்குவதுண்டு.....

நாம் யார்?
காதலில் விழுவதற்கு முன்பு அல்லது, காதலுக்கும், தோழமைக்கும் நடுவே தத்தளிக்கும் போதும் முதல் கேள்வியாக ஆண்கள் கேட்க தயங்கும் கேள்வி இது. நாம் யார்? இன்னும் நாம் நண்பர்கள் தானா? இந்த கேள்வியை கேட்க தனியாக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஆண்கள் நிறைய எதிர்பார்ப்பது உண்டு.

கடந்த காலம்?
காதலிக்கும் முன்னரும், காதலிக்க பின்னரும் சிலர் கேட்க தயங்கும் கேள்வி இது. இதற்கு முன்னர் யாரையாவது காதலித்து உண்டா? இன்றைய காலத்தில் ஒரே காதல், அவர்களையே திருமணம் என்பது எல்லாம் அதிசய நிகழ்வுகளாக மாறிவிட்டது.

பாலுணர்வு நோய் பரிசோதனை?
தகாத உறவுகள் மட்டுமின்றி வேறு சில காரணங்களினால் கூட பால்வினை நோய் தோற்று ஏற்படலாம். எனவே, திருமணத்திற்கு முன்பே இருவரும் பால்வினை நோய் பரிசோதனை செய்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

மற்றவரிடம் காதலை பற்றி?
முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களில் நண்பர்களோடு வெளிப்படையாக காதலை பற்றி பகிர்ந்துக் கொள்ள, உறவுகள் குறித்து பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது தான். இருவரின் பக்கங்களை ஊரே படிக்க செய்வது நல்லதல்ல. மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், சண்டைகள், கொஞ்சி குலாவுவதை கூட பதிவிடுவது தவறு.

திருமணம்?
எப்போது திருமணம் செய்துக் கொள்வோம், திருமணம் கொள்வோமா? ; பெரும்பாலும் சண்டைகள் ஏற்படும் போது தான் இந்த கேள்விகளை எழுகின்றன.

வன்கொடுமை?
பலரும் இந்த கேள்வியை கேட்க தயங்குவார்கள். உண்மை என்று தெரிந்தால் உறவில் விரிசல் விழுந்துவிடுமோ என்ற பயமும் இருக்கும்.

அந்தரங்கம்?
எ.கா., பிறப்புறுப்பு பகுதியில் முடிகளை அகற்ற வேண்டியது அவசியம். இதனால் பெண்களுக்கு நிறைய தொற்று பிரச்சனை ஏற்படும். மேலும் மாதவிடாய் குறித்த கேள்விகள் கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. ஏனெனில், இது குறித்து ஆண்கள் பேசக் கூடாது என்பது நமது ஊரில் எழுதப்படாத சட்டம் அல்லவா.

உடலுறவு?
உடலுறவில் எவ்வளவு நாட்டம் இருக்கிறது, அதை பற்றி என்ன தெரியும், தெரியாது என்பது குறித்து விவாதிக்க ஆண்கள் தயங்குவது உண்டு. எங்கு இதை பற்றி பேசி தங்களை தவறாக நினைத்துவிடுவார்களோ என ஆண்கள் அஞ்சுவது உண்டு.

ஆண் தோழர்கள்?
ஆண் தோழர்களை பற்றி கேள்வி கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. இதை பற்றி கேட்டால் தன்னை சந்தேக பேர்வழி என நினைத்து விடுவாளோ என ஆண்கள் தயங்குகிறார்கள்.

பாஸ்வேர்ட்?
பெண்களிடம் பெரும்பாலும் ஆண்கள் பாஸ்வேர்ட் கேட்க நினைப்பது உண்டு. ஆனால், பெண்கள் தயக்கம் இன்றி கொடுத்துவிடுவார்கள். பயம் என்னவெனில், மீண்டும் அவர்கள் தங்கள் பாஸ்வேர்ட் கேட்டுவிட்டால்???



Click it and Unblock the Notifications











