Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உடலுறவில் வலியின்றி ஈடுபடக் கற்றுக்கொள்ளுங்கள்!!
உடலுறவில் ஈடுபடுவது என்பது இயல்பு. ஆனால், ஆண் பெண் இருவரும் விரும்பி ஈடுபட வேண்டும் என்பது முக்கியமானது. கணவன், மனைவியாகவே இருப்பினும் விருப்பமின்றி உடலுறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு சமம். அதிலும் உங்கள் துணைக்கு வலி ஏற்படும் வண்ணம் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மாதவிடாய் காலத்தில், அவர்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்த நாட்களில், உடல்நிலை சரியில்லாத போது, உடல் சோர்வாக இருக்கும் போது, நன்கு உறங்கும் போது என சில சூழல்களில் அவர்களை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட வைப்பது உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைய வைக்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்...

மாதவிடாயின் போது வேண்டாம்
மாதவிடாய் காலத்திலும் சிலர் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால், அது வேண்டாம். உங்கள் துணையின் உணர்வை புரிந்துக் கொண்டு, அவரது மனநிலைக்கு ஏற்ப நடந்துக் கொள்ளுங்கள்.

உணர்வின்றி ஈடுபடாதீர்கள்
ஆண், பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபட நாட்டம் இன்றி ஈடுபடும் போது வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சூழல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுவதை தவிர்த்து, விட்டுவிடுவது நல்லது.

கருத்தடை இன்றி
ஆண்கள் கருத்தடை மாத்திரை பயன்படுத்தாத போது உறவில் ஈடுபட தயங்குவது உண்டு. அந்த சமயங்களில் பெண்கள், நீங்கள் கருத்தடை மாத்திரை உட்கொள்ள முடியாத சூழலில் இருப்பதை உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள்.

தூக்கம் வரும் போது
நல்ல உறக்கம் வரும் போது உங்கள் துணையை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வேண்டாம். வேண்டுமானாலும் கொஞ்சி விளையாடுங்கள். அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட துடிப்பது சண்டையில் கூட முடியலாம்.

வேக்ஸிங்
பெண்கள் அந்த இடத்தில் வேக்ஸிங் செய்திருக்கும் போது குறைந்தது ஓர் நாளாவது எரிச்சல் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட அடம்பிடிக்க வேண்டாம்.

வயிறு கோளாறு
வயிறு சார்ந்த கோளாறு இருக்கும் போது உடலுறவில் ஈடுபட விரும்பாதீர்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்படைய வைக்கும்.

மன அழுத்தம் இருக்கும் போது
உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறுவது உண்டு. ஆனால், மன அழுத்தம் இருக்கும் போது சிறு தூக்கம் அல்லது வெளிய சிறிது நேரம் நடந்துவந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவது தான் சரியான பயனளிக்கும். ஒருவேளை அப்போதும் உங்கள் துணை மன அழுத்தத்தோடு காணப்பட்டால் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.



Click it and Unblock the Notifications











