Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கேண்டி க்ரஷ் பெண்களும், க்ளேஷ் ஆப் கிளான்ஸ் ஆண்களும்!!
இன்றைய நிலையில் மொபைல் பயன்பாடு என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஆனால், நமது தேவையை தாண்டி வேண்டாத விஷயங்களுக்கு தான் மொபைலை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இன்னமும் கூட இதை மொபைல் என்று கூறுவதை விட, கையடக்க உலகம் என்று தான் கூற வேண்டும்.
நேரம் பார்ப்பதில் இருந்து, இடங்களை தேடுவது, கேளிக்கை, விளையாட்டு, உறவு, படிப்பு என 'அ' முதல் 'ஃ'-ன்னா வரை அனைத்தையும் இதன் மூலம் எட்டிப்பிடிப்பது என்பது மிகவும் எளிதான காரியமாகிவிட்டது. இந்த மொபைல் புரட்சி என்பது அபரிமிதமாக வளர்ந்துவிட்டது. இதனால் நாம் அடையும் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் வளர்ந்துக் கொண்டே செல்கின்றன.
உறவுகள் என்பது உணர்வுகளின் பாலம். அதன் ஆணிவேரையே அசைத்து பார்க்கிறது இந்த மொபைல் புரட்சி என்பது தான் கொடுமையான உண்மை....

எமொஜி - emoji
எமொஜி எனப்படுவது நமது உணர்வுகளை எதிரொலிக்கும் பொம்மைகள். எந்த சாட்டிங் செயலிகளை எடுத்தாலும் அதில் வகை வகையான எமொஜிகள் இருக்கின்றன. இது மனித உணர்வுகளை சீர்குலைய வைக்கிறது என்பது தான் உண்மை. நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டு, காதலியிடம் மிஸ் யூ எமொஜி அனுப்புவது, சோகமாக இருப்பது போல காண்பித்துக் கொள்வது. சமீபத்திய ஆய்வில் எமொஜியினால் உறவுகளில் உணர்வு ரீதியான நெருக்கம் குறைந்து வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பொய்கள் அதிகரிக்கும் போது தானாக உறவுகளில் விரிசல்கள் அதிகரிக்க தொடங்குகிறது.

வாட்ஸ்-அப் ப்ளூ டிக்
காதலிக்கும் ஒவ்வொருவரும் குமுறும் விஷயம் இது. வேண்டாத வேலையாக செய்தியை பார்த்துவிட்டால் "ப்ளூ டிக்" காண்பித்து விடும்படி வாட்ஸ்-அப் வடிவமைப்பு செய்துள்ளது. சில சமயங்களில் உங்களது நெட் ஆனில் இருந்தால் அல்லது வாட்ஸ்-அப் ஆக்டிவாக இருந்தால் கூட இது ப்ளூ டிக்கை காண்பித்துவிடுகிறது. இதனால் குடுமி பிடி சண்டை எல்லாம் நேர்கிறது என்பது தான் உண்மை.

படுக்கையறையில் மொபைல் பயன்பாடு
கணவனும், மனைவியும் மனம் திறந்து பேசும் ஒரே இடம் படுக்கையறை தான். அங்கும் நுழைந்துவிட்டது மொபைல். இருவரும் அவரவர் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், ஃபேஸ் புக் என்று அரட்டை அடிப்பது. கேம்ஸ் விளையாடுவது தான் மிகவும் கொடுமை, இன்றளவில் கேண்டி க்ரஷ், க்ளேஷ் ஆப் கிளான்ஸ் விளையாடாத இளைய சமூதாயமே இல்லை என்று தான் கூற வேண்டும் போல. அந்த அளவு அடிமையாக்கி வைத்திருக்கிறது அந்த மாய உலகம்.

இரண்டு மொபைல்
ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டு காலம் போய், இரண்டு மொபைல் பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. முக்கியமாக காதலர்கள், காதலி காதலனுடன் பேசும் அந்த நேரத்தில் கூட, மறுபுறம் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பை பிரிய மனம் வருவதில்லை. இதனால், இவர்களுக்குள் நடைபெறும் உரையாடலே வலுவிழந்துப் போகிறது. பிறகு எங்கிருந்த காதல் வலிமையடையும், பிரேக்-அப் தான் ஆகும்.

வேண்டாத செயல்கள்
காதலிக்கும் போதே, அந்தரங்க புகைப்படங்கள் பகிர்வது, உரையாடல்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பதிவு செய்துக் கொள்வது பிறகு என்றேனும் சண்டை ஏற்பட்டால் அதை மற்றவருடன் பகிர்ந்து வெறுப்பை காண்பிப்பது எல்லாம் எதற்கு? இது தான் நீங்கள் செய்யும் உண்மையான காதலா? பெண்ணின் உடலை மட்டுமே காண விரும்புவதற்கு பெயர் வேறல்லவா...

அரசு சட்டம்
புரளிகளை பரப்புவது, தனிநபர் பற்றிய தனிப்பட்ட விவரங்களை பரப்புவது, அவதூறு செயல்களில் ஈடுபடுவது போன்றவை இப்போது வாட்ஸ்-ஆப்பில் கண்காணிக்கும் அளவு நாம் தவறாக நடந்து வருகிறோம். விஜயகாந்த் பாணியில் கூற வேண்டும் எனில், "எவ்வளோ பெரிய கேவலம் தெரியுமா இது" நமது தனிப்பட உரையாடல்களை வேறொருவர் வேவு பார்க்கிறார் என்றால் எப்படி நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியும். இது நமக்கு நாமே வைத்துக் கொண்ட ஆப்பு!!

தனிப்பட்ட வாழ்வியல் பாதிப்பு
இதனால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது அல்லவா. அரசு சட்டம் என்று மட்டுமின்றி. உங்களை நம்பி தனது அந்தரங்கத்தை கூறும் நபரை பற்றியும் நீங்கள் பரப்பி, உலகிற்கு வெட்டவெளிச்சமாக காண்பிப்பது மிகப்பெரிய துரோகம் தானே. இப்போதெல்லாம் பிரிந்தவர்கள் சேர்வதே இல்லை. பிரேக்-அப் என்பது தான் முடிவா? உங்களுக்குள் இருந்த காதலால் உங்களை மீண்டும் இணைக்க முடியவில்லை எனில், நீங்கள் இவ்வளவு நாள் செய்தது காதல் இல்லை.

உறவுகளில் தேய்மானம்
இதனால் தான் இன்றைய தலைமுறையின் காதல் உறவுகளில் அதிகளவில் தேய்மானம் காணப்படுகிறது. இதை எல்லாம் நாம் மிக சிறிய விஷயமாக கருதி வருகிறோம் ஆனால், நம் வாழ்வில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மாற்றங்களுக்கு இது தான் காரணம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications