Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஆம்பளைங்க மேல அப்படி என்னதா கோபம் சுஷ்மா ஸ்வராஜ்-க்கு!
ஆண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும், பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும், சுஷ்மா ஸ்வராஜ்!
நேற்று ஜி.ஒ.எம் எனும் அனைத்து அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ஆண்கள் ஹோம் சயின்ஸ் பயில வேண்டும், பெண்கள் பிசிகல் எஜுகேஷன் பயில வேண்டும் என கூறியுள்ளார்.
அதாவது ஆண்கள் வீட்டு வேலைகளையும், பெண்கள் தற்காப்பு கலைகள் போன்றவற்றையும் பயில வேண்டியது அவசியம் என இவர் கூறியுள்ளார்.
இதனால், கணவன், மனைவி வாழும் ஒரு குடும்பத்தில் என்னென்ன நன்மைகள் எல்லாம் விளையும் என இங்கு காணலாம்...

#1
மனைவி, அம்மா உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் வீட்டில் இருக்கும் ஆண்களே சமைத்தும் வீட்டை சுத்தப்பத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

#2
ஆண்கள் வீட்டில் இல்லாத போது, யாராது திருட வந்தாலோ, தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்தாலோ பெண்கள் எதிர்த்து போராட முடியும்.

#3
பொதுவாகவே, ஆண்களுக்கு வேலை சார்ந்த மேலாண்மை என்று வரும் போது வீட்டிற்கு வெளிய கில்லியாக இருந்தாலும், வீட்டின் உள்ளே எந்த வேலையும் தெரியாமல் தான் இருப்பார்கள்.
வீட்டை சுகாதாரமாக வைத்துக் கொள்வது ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளையும் அளிக்கும். எனவே, ஆண்கள் வீட்டு வேலைகள் பயில்வது பேச்சுலர் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது.

#4
என்று ஒரு நாள் இந்திய நாட்டில் பெண் ஒருவர் நடுராத்திரியில் தைரியமாக சென்று வர முடிகிறதோ அது தான் உண்மையான சுதந்திரம்...
அதற்கு துணையாக இருக்க, பெண்கள் மத்தியில் தைரியம் அதிகரிக்க பெண்கள் கட்டாயம் தற்காப்பு கலை பயில வேண்டும்.

#5
பொதுவாகவே பெண்கள் வீக்கர் செக்ஸ் என்ற பாகுபாடு பார்க்கப் படுகிறது. இதை உடைத்து எரிய சுஷ்மா கூறியது போல, பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டியது அவசியம்.

#6
கற்பழிப்பு நிகழ்வுகள் ஏதோ காலை சூரியன் விடிந்து, மாலை அஸ்தமனம் ஆவது போல தினந்தோறும் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் தற்காப்பு கலை கற்றுக் கொள்ள தான் வேண்டும்.

#7
ஆண்கள், பெண்கள் சமக்கு சமம் என எல்லா வேலைகளும் செய்ய துவங்கி விட்டார்கள். ஆனால், அதற்கு நிகராக, பெண்கள் முன்பு செய்து வந்த எல்லா வீட்டு வேலைகளும் ஆண்களுக்கு செய்ய தெரியுமா என்றால்., பத்தில் ஒருவருக்கு கூட பெரிதாக, முழுதாக தெரியாது. எனவே, பெண்கள் சவால் விடும் விதமாகவாவது, ஆண்கள் வீட்டு வேலைகளை கற்க தான் வேண்டும்.

#8
இன்று பெரும்பாலும், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தான் குடும்பங்கள் இருக்கின்றன.
எனவே, ஆண்கள் வீட்டு வேலைகள் கற்றுக் கொள்வது மனைவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அதே போல, பெண்கள் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்வது, குடும்பத்திற்கே பெரும் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











