Just In
- 43 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 3 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கல்யாணமே கட்டிக்காம கூடிக்கலாமா? இந்தியாவில் ஓர் விசித்திர கிராமம்!
கல்யாணமே செய்யாமல் வாழும் ராஜஸ்தானின் கரசியா பழங்குடி மக்கள்!
கல்யாணம் செய்துக் கொள்ளாமல் வாழும் உறவை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுதும் பரவியதாக தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால், இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இருக்கிறது! ராஜஸ்தானில் இருக்கும் கரசியா எனும் பழங்குடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி தான் வாழ்ந்து வருகிறார்கள். இதை தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்று, பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
70 வயது மூதாட்டி...
லிவ்-இன் என்றால், இது மேற்கத்தியத்திற்கே சவால் விடும் அளவு இருக்கிறது. 70 வயது மூதாட்டி, தனது மகன் முன்னாள் தனது லிவ்-இன் பார்ட்னரை திருமணம் செய்துக் கொள்கிறார். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
Image Credit : womenpla.net
டாபா சடங்கு!
கடந்த ஆயிரம் வருடங்களாக கரசியா பண்பாட்டில் அவர்கள் கிராமத்தில் இருந்து யாரை வேண்டுமானாலும் துணையாக தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்கு அந்த பழங்குடி ஒப்புதல் வழங்குகிறது.
இவர் இந்த நபரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என எந்த ஒரு நிபந்தனையும் இங்கே இல்லை. ஆனால், போதிய அளவு பணம் இருந்தால் அவர்கள் செய்துக் கொள்ளலாம்.
அதாவது சம்மதத்துடன் அல்ல, கடத்தியும் திருமணம் செய்துக் கொள்ளலாம். திரும்பி வரும் போது அவர்கள் ஜோடியாக தான் வர வேண்டும்.
Image Credit:i.pinimg.com
கடமை!
இந்த கிராமத்தில் திருமணம் செய்துக் கொள்ளாமலே இருவர் ஒன்றாக வாழலாம். இதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது, அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனில், அந்த நபர், வேறு துணையை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
Image Credit: Static Flickr
டவுரி!
இந்த கிராமத்தில், மணமகன் வீட்டார் தான் மணமகள் வீட்டுக்கு சீர்வரிசை, டவுரி கொடுக்க வேண்டும். அது திருமணம் நடந்த பிறகு இணைந்தாலும் சரி, திருமணம் செய்யாமல் இணைந்தாலும் சரி, மணமகன் வீட்டார் கொடுக்க வேண்டியதை கொடுத்தே ஆகவேண்டும்.
அதே போல, மணமகன் வீட்டார் தான் திருமண செலவு மொத்தத்தையும் எடுத்து செய்ய வேண்டும்.