Latest Updates
-
கோடை வெயிலை சமாளிக்க இந்த செடிகள் போதும்… வீட்டில் வைத்தால் பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம் -
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன?
உறவுகளை சங்கடப்படுத்தும் இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா மாத்திக்கங்க!
உறவுகளுக்குள் சங்கடம் வர காரணம் என்ன
நாம் இந்த பூமியில் பிறந்தது முதல் இறக்கும் வரை பல விஷயங்களை வாழ்க்கையில் சந்திக்கிறோம். நம்முடன் கடைசி வரை எதுவுமே உடன் வர போவதில்லை என்றாலும். நாம் இறந்த பிறகும் கூட நமது பேரும் புகழும் நிலைத்திருக்கும். அந்த பெயரையும் புகழையும் காப்பாற்றிக்கொள்ள நாம் நினைக்கிறோம், ஆனால் எந்த முயற்சியும் செய்வதில்லை.
மாறாக பணம், காசு என்று அலைந்து கொண்டிருக்கிறோம். நல்ல மனிதனாக வாழந்து விட்டு போக வேண்டும் என்றே நாம் யாரும் நினைப்பதில்லை.

பணம் இருக்கிறது!
உங்களுக்கு ஒரு ஏழை நண்பர் இருந்தால் அவரிடம் சென்று என் அப்பா எனக்கு இந்த விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்தார் என கூறுவது சிலரது பண்பாகும். ஆனால் உங்களது ஏழை நண்பன் தன் அப்பாவால் இது முடியவில்லையே என்று மனம் வருந்துவது பற்றி என்னைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

அறிவுரை!
மற்றவர்களுக்கு நாம் அதிகமாக அறிவுரைகளை கூறிக்கொண்டே இருப்போம், ஆனால் நாம் அதை எல்லாம் கடைபிடிக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. நம்மை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று நினைப்பது தானே சரியானது..!

பின்னால் பேசுவது
ஒருவரை பற்றி பின்னால் பேசுவது அவர்களுக்கு எத்தனை வலியை கொடுக்கும் என்பதைப் பற்றி நாம் யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. ஒரு சில நிமிட மகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் எதை எதையோ முதுகுகிற்கு பின்னால் பேசிவிடுகிறோம். அதனால் உண்டாகும் பின்விளைவுகளை பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

உதவி செய்யாமல் இருப்பது
நமது கண்ணிற்கு முன்னால் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் பசியும் பட்டினியுமாக இருந்தாலும், அன்னதானம் தருவது, விசேஷ உணவுகள் போன்றவற்றை வீட்டில் சமைத்து வைத்துவிட்டு வருபவர்களுக்கு கொடுப்பதை விட, ஒருவேளை உணவுக்கே இல்லாத குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். மன திருப்தியும் கிடைக்கும்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது
நமக்கு இருப்பதை பெரிதாக நினைத்து வாழாமல், பிறரது பொருளுக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய குற்றமாகும். உங்களது பொருளை மற்றவர் பறிக்க நினைத்தால் உங்களுக்கு ஏற்படும் மன வருத்தம் தான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்பதை நினைத்துப்பார்த்தால் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications