Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 14 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இருபது வயதில் இந்த கவலைகள் எதற்கு?
இருபது வயதில் இந்த கவலைகள் வேண்டாம்
இருபது வயது என்பது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது இந்த வயதை பலர் கவலையிலேயே தொலைத்துவிடுகின்றனர். கல்லூரி, நண்பர்கள், அரட்டை, அவுட்டிங் என்று ஜாலியாக இருக்க வேண்டிய வயதில் தேவையில்லாதவற்றை எல்லாம் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பது சரிதானா? சரி 20 வயதில் இருப்பவர்கள் எதை எல்லாம் நினைத்து கவலைப்பட கூடாது என்பது பற்றி காணலாம்.
1. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?
நாம் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நம் நினைவுக்கு முதலில் வருவது அடுத்தவர்களை பற்றி தான். இதை செய்தால் மத்தவங்க என்ன நினைப்பாங்க..? என்று நினைத்து கவலைப்பட வேண்டாமே!
2. முக புத்தகம்
உங்களை விட வயதில் பெரியவர்கள் எல்லாம் திருமணம் ஆகப்போகிறது, திருமணம் ஆகிவிட்டது, குழந்தை பிறந்துவிட்டது என ஸ்டேடஸ் போட்டால் நமக்கு இன்னும் இது எல்லாம் நடக்கவில்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். எதற்கும் ஒரு வயது வரம்பு உள்ளது.
3. காதல் தோல்வி
காதல் தோல்வி எல்லாம் இந்த வயதில் சாதாரணம். கொஞ்ச நாட்கள் போனால் அது தானாகவே மறந்துவிடும். நீங்களே ஒரு நாள் நல்லவேளையாக தப்பித்தோம் என நினைத்து சிரிப்பீர்கள். அதற்காக எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
4. காதல் செட் ஆகலயே..!
எல்லோரும் காதலிக்கறாங்க..! எனக்கு மட்டும் இன்னும் காதல் செட் ஆகலயே அப்படின்னு கவலைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். வாழ்க்கையில் காதலை விட அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சரியான வயதில் வரும் காதல் நிலையாக இருக்கும் எனவே நம்பிக்கையுடன் இருங்கள், தவறானவரிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
5. பிரண்ட்ஸ் சண்டை
இதுவரை நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது என்னுடன் சண்டை போடுகிறான். வேறு பிரண்ட்ஸ் அவனுக்கி கிடைத்துவிட்டார்கள் என்று மனதை வருத்திக்கொள்ள வேண்டாம்.
6. பெற்றோரின் பிரிவு
நீங்கள் வேலைக்காகவே அல்லது மேல் படிப்பிற்காகவோ உங்களது சொந்த வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டியிருக்கும். பெற்றோர்களிடம் பேச பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. விடுமுறையில் வீடு சென்று பார்த்துக்கொள்ளலாம். அதற்காக பெரிதாக கவலை வேண்டாம்.