Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சிவராத்திரி விரதத்திற்கான சுரைக்காய் கோப்தா ரெசிபி
மகா சிவராத்திரி வரப்போகிறது. சிலர் மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருக்கும் போது, சிலர் எதையும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் சிலரோ ஒருசில உணவுப் பொருட்களை சமைக்கும் போது சேர்க்காமல், உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சமைக்கும் உணவில் சேர்க்காமல் சமைப்பார்கள்.
இங்கு அப்படி வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். பொதுவாக இது வட இந்திய உணவுகளில் ஒன்று. அது தான் சுரைக்காய் கோப்தா. இப்போது அந்த ரெசிபியை எப்படி சமைப்பதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1 (துருவியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 3 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கல் உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் துருவிய சுரைக்காயில் உள்ள நீரை மஸ்லின் துணி மூலம் பிழிந்து எடுத்துவிட்டு, பின் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
பின் அதில் சுரைக்காயை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அடுத்து வதக்கி வைத்துள்ள சுரைக்காய் கலவையானது குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், உலர் திராட்சை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பேஸ்ட், மீதமுள்ள சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, 4-5 நிமிடம் வேக வைத்து, பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வறுத்து வைத்துள்ள கோப்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான சுரைக்காய் கோப்தா ரெடி!!! இது குட்டு சப்பாத்திக்கும் மிகவும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications