Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சிவராத்திரி விரதத்திற்கான சுரைக்காய் கோப்தா ரெசிபி
மகா சிவராத்திரி வரப்போகிறது. சிலர் மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருக்கும் போது, சிலர் எதையும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் சிலரோ ஒருசில உணவுப் பொருட்களை சமைக்கும் போது சேர்க்காமல், உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சமைக்கும் உணவில் சேர்க்காமல் சமைப்பார்கள்.
இங்கு அப்படி வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். பொதுவாக இது வட இந்திய உணவுகளில் ஒன்று. அது தான் சுரைக்காய் கோப்தா. இப்போது அந்த ரெசிபியை எப்படி சமைப்பதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1 (துருவியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 3 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கல் உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் துருவிய சுரைக்காயில் உள்ள நீரை மஸ்லின் துணி மூலம் பிழிந்து எடுத்துவிட்டு, பின் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
பின் அதில் சுரைக்காயை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அடுத்து வதக்கி வைத்துள்ள சுரைக்காய் கலவையானது குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், உலர் திராட்சை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பேஸ்ட், மீதமுள்ள சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, 4-5 நிமிடம் வேக வைத்து, பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வறுத்து வைத்துள்ள கோப்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான சுரைக்காய் கோப்தா ரெடி!!! இது குட்டு சப்பாத்திக்கும் மிகவும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications