Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
அருமையான...சில்லி பன்னீர்!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பன்னீருக்கு...
கார்ன் ப்ளார் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
பின் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அந்த கலவையில் போட்டு, பிரட்டிக் கொள்ளவும். பின் அதன் மேல் சிறிது மைதாவை தூவி விட்டு, 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் இந்த பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வேண்டுமென்றால் உப்பு சேர்த்து, தீயை அதிகமாக வைத்து, தொடர்ந்து வதக்கவும்.
பின் குடைமிளகாய் ஓரளவு வெந்ததும், தீயை குறைத்து, அதில் பொரித்து வைத்துள்ள பன்னீரை போட்டு, அதில் உள்ள சாஸ் எல்லாம் பன்னீருடன் சேரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இப்போது அருமையான சில்லி பன்னீர் ரெடி!!!



Click it and Unblock the Notifications
