Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
அருமையான...சில்லி பன்னீர்!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பன்னீருக்கு...
கார்ன் ப்ளார் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
பின் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அந்த கலவையில் போட்டு, பிரட்டிக் கொள்ளவும். பின் அதன் மேல் சிறிது மைதாவை தூவி விட்டு, 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் இந்த பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வேண்டுமென்றால் உப்பு சேர்த்து, தீயை அதிகமாக வைத்து, தொடர்ந்து வதக்கவும்.
பின் குடைமிளகாய் ஓரளவு வெந்ததும், தீயை குறைத்து, அதில் பொரித்து வைத்துள்ள பன்னீரை போட்டு, அதில் உள்ள சாஸ் எல்லாம் பன்னீருடன் சேரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இப்போது அருமையான சில்லி பன்னீர் ரெடி!!!



Click it and Unblock the Notifications











