Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
அருமையான...சில்லி பன்னீர்!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பன்னீருக்கு...
கார்ன் ப்ளார் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
பின் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அந்த கலவையில் போட்டு, பிரட்டிக் கொள்ளவும். பின் அதன் மேல் சிறிது மைதாவை தூவி விட்டு, 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் இந்த பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வேண்டுமென்றால் உப்பு சேர்த்து, தீயை அதிகமாக வைத்து, தொடர்ந்து வதக்கவும்.
பின் குடைமிளகாய் ஓரளவு வெந்ததும், தீயை குறைத்து, அதில் பொரித்து வைத்துள்ள பன்னீரை போட்டு, அதில் உள்ள சாஸ் எல்லாம் பன்னீருடன் சேரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இப்போது அருமையான சில்லி பன்னீர் ரெடி!!!



Click it and Unblock the Notifications